சூரா அல்பாத்திஹா விளக்கவுரை

, , No Comments
சூரா அல்பாத்திஹா




இது திருக்குர்ஆனின் முதலாவது அத்தியாயமாகும். இந்த அத்தியாயத்தை விளங்கிக் கொள்ள ஏராளமான ஹதீஸ்கள் இருந்தாலும் அவற்றிலிருந்து ஒரு ஹதீஸை இங்கு காண்போம்.



‘தொழுகையில் ஓதுவதை எனக்கும் என் அடியானுக்கும் இடையில் பங்கிட்டுள்ளேன். என் அடியான் கேட்பவை அவனுக்கு உண்டு. அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் (அகில உலகங்களையும் படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்) என்று ஒருவன் கூறும் போது, ‘என்னை என் அடியான் (புகழ வேண்டிய விதத்தில்) புகழ்ந்து விட்டான்’ என்று அல்லாஹ் கூறுகிறான்.



அவன் அர்ரஹ்மா னிர்ரஹீம் (அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்) என்று கூறும் போது, ‘(என்னைப் பாராட்ட வேண்டிய விதத்தில்) என் அடியான் பாராட்டி விட்டான்’ என்று அல்லாஹ் கூறுகிறான்.



‘மாலிக்கி யவ்மித்தீன்’ (நியாயத் தீர்ப்பு நாளின் அதிபதி) என்று கூறும் போது, ‘என்னைக் (கௌரவப் படுத்த வேண்டிய விதத்தில்) கௌரவப் படுத்தி விட்டான்’ என்று அல்லாஹ் கூறுகிறான்.



‘இய்யாக நஃபுது வஇய்யாக நஸ்தயீன்’ (உன்னையே வணங்குகிறோம், உன்னிடமே உதவி தேடுகிறோம்) என்று கூறும் போது, ‘இது தான் எனக்கும் என் அடியானுக்கும் இடையே உள்ள உறவாகும்’ என்று அல்லாஹ் கூறுகிறான்.



‘இஹ்தி னஸ்ஸிராத்தல் முஸ்தகீம்’ (எங்களுக்கு நேர் வழியைக் காட்டுவாயாக!), ‘ஸிராத்தல்லதீன அன்அம்த அலைஹிம்’ (எவருக்கு நீ அருள் புரிந்தாயோ அவர்களின் வழியைக் காட்டு), ‘கைரில் மஃலூபி அலைஹிம் வலல்லால்லீன்’ (வழிகெட்டவர்கள், உன்னால் கோபிக்கப்பட்டவர்களின் வழியை அல்ல!) என்று கூறும் போது’ என் அடியானின் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) கூறினார்கள்.



(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: முஸ்லிம், நஸயீ, அஹ்மத், திர்மிதி, அபூதவூது)



0 comments:

Post a Comment