வாழ்வின் முன்னேற்றத்திற்கு வழி என்ன?

, , No Comments
ஒரு கிராமவாசி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து கேட்டார்கள். யாரஸூலல்லாஹ் தங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா ? என்றவுடன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ''கேளுங்கள்'' என்றார்கள்.

1 நான் பணக்காரனாக என்ன செய்ய வேண்டும் ? o நீங்கள் போதுமென்ற தன்மையை பெற்றுக் கொள்ளுங்கள். பணக்காரராகிவிடுவீர்கள்.

2 மிகப்பெரிய ஆலிமாக என்ன வழி ?
o தக்வாவை கடைப்பிடித்துக் கொள்ளுங்கள். ஆலிமாகி விடுவீர்கள்.

3 நான் கண்ணியமுடையவனாக வாழ வழி என்ன ?
o ஜனங்களிடம் கையேந்துவதை விட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள்

4 நான் ஒரு நல்ல மனிதராக ஆக விரும்புகிறேன்.
o ஜனங்களுக்கு உங்களை கொண்டு பிரயோஜனம் ஏற்படட்டும். நல்ல மனிதராக ஆகி விடுவீர்கள்.

5 நான் நீதியுள்ளவனாக விரும்புகிறேன்!

o நீங்கள் எதை விரும்புகிறீர்களோ, அதை மற்றவருக்கும் விரும்புங்கள்.

6 நான் சக்தியுடையவனாக ஆக என்ன வழி ? o அல்லாஹ்வின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்

7 அல்லாஹ்வுடைய தர்பாரில் விசேஷ அந்தஸ்து கிடைக்க விரும்புகிறேன் ?
o அதிகமாக திக்ரு ( தியானம் ) செய்யுங்கள்

8 ரிஸ்கில் அபிவிருத்தி ஏற்பட என்ன வழி ?
o எப்பொழுதும் நிரந்தரமாக ஒழுவுடன் இருங்கள்



9 துஆ அங்கீகரிக்கப்பட என்ன வழி ? o ஹராமான பொருளாதாரத்தை உண்பதை விட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

10 முழுமையான ஈமானுடையவராக என்ன வழி ?
o நற்குணமுடையவராக ஆகி விடுங்கள்.

11 கியாமத்தில் அல்லாஹ்விடன் பாவமற்றவனாக பரிசுத்த நிலையில் சந்திக்க விரும்புகிறேன் ?
o குளிப்பு கடமையானவுடன் குளித்து விடுங்கள்

12 பாவங்கள் குறைய வழி என்ன ?
o அதிகமாக அல்லாஹ்விடன் பாவ மன்னிப்புத் தேடுங்கள்

13 கியாமத் நாளில் எனக்கு பிரகாசம் ஏற்பட வழி என்ன ?
o அநீதம் செய்வதை விட்டு விடுங்கள். பிரகாசம் கிடைக்கும்

14 அல்லாஹ் என் குறைகளை மறைக்க வழி என்ன ?
o பிறருடைய குறைகளை இவ்வுலகில் மறைத்து விடுங்கள்

15 உலகத்தில் இழிவடைவதை விட்டும் பாதுகாப்பு எதில் உள்ளது ?
o விபச்சாரம் செய்வதை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள். இழிவடையாமல் பாதுகாக்கப்படுவீர்


16 அல்லாஹ், ரசூல் உடைய பிரியனாக வழி என்ன ? o அல்லாஹ், ரசூல் பிரியப்படக்கூடியவர்களை பிரியபடுங்கள்



17 அல்லாஹ், ரசூலுக்கு வழிப்பட்டவனாக ஆக வழி என்ன ? o பர்ளை பேணுதலாக கடைப்பிடியுங்கள்

18 நான் இறைத் தொடர்புடையவனாக ஆக வழி என்ன ?
o அல்லாஹ்வை பார்ப்பதாக என்ணி வணங்குங்கள் (அல்லது) அல்லாஹ் உங்களை பார்ப்பதாக எண்ணி வணங்குங்கள்


19 பாவத்தை விட்டும் மன்னிப்பளிக்கக்கூடிய வஸ்த்துக்கள் என்ன ? o கண்ணீர், பலஹீனம், நோய்

20 நரகத்தின் நெருப்பை குளிர வைக்கக் கூடியது எது ?
o இவ்வுலகில் ஏற்படும் முஸிபத்தின் மீது பொறுமையாக இருப்பது

21 அல்லாஹ்வுடைய கோபத்தை எது குளிர வைக்கும் ?
o மறைவான நிலையில் தர்மம் செய்வது - சொந்த பந்தங்களை ஆதரிப்பது

22 எல்லாவற்றிலும் மிகப்பெரிய தீமை எது ?
o கெட்ட குணம் - கஞ்சத்தனம்

23 எல்லாவற்றிலும் மிகப்பெரிய நன்மை எது ?
o நற்குணம் - பொறுமை - பணிவு

24 அல்லாஹ்வுடைய கோபத்தை விட்டும் தவிர்த்துக் கொள்ள வழி என்ன ?
o மனிதர்களிடம் கோபப்படுவதை விட்டு விடுங்கள்

( ஆதாரம் : முஸ்னது அஹ்மது - கன்ஸுல் உம்மால் )

0 comments:

Post a Comment