கிரீஸ் சாப்பிட்டு எஞ்சின் ஒயில் குடிக்கும் அதிசய மனிதர்!

, , No Comments
வரவர மனுசங்களுக்கு எதைச்சாப்பிடனும் எதைச்சாப்பிடக்கூடாது என்கிற வரைமுறைகூட தெரியாமல் வரம்பு மீறிக்கொண்ட போகிறது மனித நடவடிக்கைகள். நாம் சொல்லும் இந்த செய்தி நிச்சயம் இதை உங்களுக்கு தெளிவுபடுத்தும். சவுதி ஆரேபிய நாட்டைச்சேர்ந்தவர் மெஹமட் ஓமர். இவர் ஒரு வாகன திருத்த


வேலைகள் மேற்கொள்ளும் மெக்கானிக் ஆவார். இவர் தினமும் இரண்டு தொடக்கம் நான்கு கேன்கள் வாகன மோட்டார் ஓயில் குடிக்கின்றார். என்ன அதிர்ச்சியாக இருக்கிறதல்லவா? இதுபற்றி சவுதிஆரேபியாவின் பிரபல பத்திரிகை ஒன்று இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளவை பின்வருமாறு:-


குறித்த நபர் தினமும் 2-4 கேன்கள் எஞ்சின் ஓயில் குடிப்பதோடு மட்டும் இன்றி கார்களுக்கு பயன்படுத்தப்படும் கிரீஸ் ஐ தினமும் 2.5 கிலோ சாப்பிட்டு வருகிறார். இதற்காக இவர் மாதாந்தம் 900 சவுதி றியாத்கள் செலவழிப்பதாக குறிப்பிடுகின்றார். இவரின் இந்த செயற்பாடு மத்திய கிழக்கு நாடுகள் மட்டும் இன்றி உலகம் எங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையெல்லாம் சர்வசாதாரணமாக மேற்கொள்ளும் இவர் இது பற்றி அவரிடம் கேட்டதும். வாழ்க அல்லாஹ் இவர் என்னை ஆரோக்கியமாக வைத்திருக்கிறார் என்று இலவான பதிலோடு முடித்துக்கொள்ளுகிறார்….
thanks to:athirchi.com

0 comments:

Post a Comment