உடல் எடை அதிகரிக்க தவறான உணவுப் பழக்கமே காரணம்!

ஜனனி கை நிறைய சம்பாதிக்கிறார். அன்பான கணவர். கார், வீடு, குழந்தைகள் என்று எதிலும் அவருக்குக் குறையில்லை. ஆனாலும் அவர் உற்சாகமாகவே இல்லை. எப்போதும் களைத்துப் போய் சோர்வாகவே இருக்கிறார். போதாததற்கு, சென்ற வாரம் அவருக்குச் சர்க்கரை நோய் இருப்பதாகக் கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறார் அவரது குடும்ப டாக்டர். 

ஏற்கெனவே ஒரு தடவை அவரை ஹார்ட் அட்டாக் வேறு லேசாக தட்டிப் பார்த்துவிட்டுச் சென்றிருக்கிறது. நீங்கள் உங்கள் எடையைக் குறைத்தேயாக வேண்டும். உங்களின் உடல் பருமன் தான் உங்களுக்கு வரும் பல நோய்களுக்கும் காரணம் என்றார் டாக்டர். 

32 வயது ஜனனி, 80 கிலோ எடை இருந்தார். அதனால் உடனே எடையைக் குறைத்துவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். டி.வி. விளம்பரங்களைப் பார்த்து இடுப்பில் பெல்ட் கட்டிக் கொள்வது போன்ற சுலபமான உடல் இளைப்பு வழிகளைத் தேடிப் போனார். எந்தப் பலனும் இல்லை. பட்டினி கிடந்தால் உடல் இளைத்துவிடும் என்று நினைத்து, உடம்பை அடிக்கடி பட்டினி போட ஆரம்பித்தார். அதன் விளைவு மோசமாக இருந்தது. அதனால் பட்டினி கிடப்பதை விட வேண்டிய நிர்ப்பந்தம்.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதர சகோதரிகளே!
இலங்கையில் முஸ்லிம்கள் மீதான இன வெறியர்களால் மேற்கொள்ளப்படும் இன அழிப்பு நடவடிக்கைகள் பற்றி நீங்கள் அனைவரும் நன்கு அறிந்திருப்பீர்கள். ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு சகோதரன் என்பதற்கிணங்க, இலங்கை முஸ்லிம்களுக்காக உலகிலுள்ள அனைத்து முஸ்லிம்களும் பல்வேறு வடிவங்களில், பல்வேறு முறைகளில் உதவி செய்தல் ஒவ்வொருவோர் மீதும் கட்டாய கடமையாகும்.
எனவே, இலங்கை வாழ் எமது முஸ்லிம் உறவுகளுக்காக பின்வரும் காரியங்களை அனைவரும் அதிகம் செய்யும்படி தாழ்மையோடு கேட்டு கொள்கிறோம்.


1. உங்கள் ஒவ்வொரு நேர தொழுகைக்கு பின்னரும் இலங்கை முஸ்லிம்களின் பாதுகாப்புக்காகவும் இனவெறியர்களின் அழிவுக்காகவும் துஆ செய்யுங்கள்.
2. உங்கள் ஊர்களில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் அனைத்து தொழுகையிலும் முஸ்லிம்களின் பாதுகாப்புக்காக வேண்டி குனூத் ஓதுங்கள்.
3. உங்கள் வீடுகளிலும் பள்ளிவாசல்களிலும் இதற்காக குர்ஆன் மஜ்லிஸ்கள், ஸலவாத் மஜ்லிஸ்களை ஏற்பாடு செய்து அவற்றை ஓதி அல்லாஹ்விடம் உதவி கேளுங்கள்.
4. எவ்வாறு பத்ர் ஸஹாபாக்களுக்கு பத்ர் யுத்தத்திலே படை பலமும் ஆயுத பலமும் மிக்க காபிர்களை அழிக்க அல்லாஹ் உதவி செய்தானோ, அது போல துணை செய்யும்படி பத்ர் ஸஹாபக்களின் பொருட்டால் அல்லாஹ்விடம் கேளுங்கள்.
5. முடிந்தவர்கள் சுன்னத்தான நோன்புகளை நோற்று அல்லாஹ்விடம் உதவி கேளுங்கள்.
6. சக்தி மிக்க தஹஜ்ஜத் தொழுகை தொழுது அல்லாஹ்விடம் உதவி கேளுங்கள்.
7. இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் முடிந்தவரை ஆயத்துல் குர்ஷி, ஸலவாத், இஸ்திக்பார் போன்றவற்றை எந்நேரமும் ஓதிக்கொண்டே இருங்கள்.
அனைவரையும் பாதுகாக்க அல்லாஹ் போதுமானவன்.
******************************************
இஸ்லாமிய பேரரசின் கலிபா உமர்(ரலி)யிடம் ஒரு கொலை வழக்கு தீர்ப்புக்கு வருகிறது. கொலை செய்யப்பட்டவரின் மகன், பழிக்கு பழி வாங்குவதில் தீவிரமாக இருக்கிறார். குற்றம் சாட்டப்பட்டவர், தனக்கு இரண்டு நாள் அவகாசம் வேண்டும் "நான் ஒருவருக்கு காசு கொடுக்க வேண்டியுள்ளது. அதை திருப்பிக்கொடுத்து விட்டு, என் மகனை என் குடும்பத்தில் யாராவது ஒரு பொறுப்பானவரிடம் ஒப்படைத்து விட்டு வருகிறேன்" என வேண்டுதல் வைக்கிறார்... அதற்கு குற்றம் சாட்டியவர், "இல்லை இவர் நம்மை ஏமாற்றி விட்டு தப்பிக்க பார்க்கிறார்" என்கிறார்... "யாராவது ஒருவர் இவருக்கு பொறுப்பேற்றுக் கொண்டால், நான் இவர் போய் வர சம்மதிக்கிறேன்" என்றார்... உடனே, அபு தர் (ரலி) அவர்கள், “அவருக்கு தான் பொறுப்பு” ஏற்பதாக சொல்கிறார். 



அப்போது உமர், "அவர் ஏமாற்றி சென்றால் நீங்கள் தண்டனையை ஏற்க வேண்டும். நன்கு யோசித்து சொல்லுங்கள்" என அபு தரிடம் சொல்கிறார்... அபுதரும் தான் ஏற்றுக்கொள்வதாக சொல்கிறார்... தண்டனைக்குரிய நபருக்கு மூன்று நாட்கள் அவகாசம் கொடுக்கப்படுகிறது. மூன்றாவது நாள் அஸர் (மாலை) தொழுகைக்கு முன் வந்து விடவேண்டும் என்ற நிபந்தனையோடு விடப்படுகிறார்... இரண்டு நாட்கள் ஓடியது. மூன்றாவது நாள் வந்தது. அஸர் (மாலை) தொழுகை நடைபெற்றது. எல்லோரும் தண்டனையை நிறைவேற்ற ஆயத்தமாகிய நிலையில் குறிப்பிட்ட நபருக்காக காத்திருக்கின்றனர் நேரம் செல்ல செல்ல மக்கள் மத்தியில் சலசலப்பு... தூரத்தில் ஒரு குதிரை மிகவும் வேகமாக வருகிறது... தண்டனைக்குரிய நபர் வந்துவிட்டார்..... உமர் அவரிடம் "நீர் ஏன் திரும்ப வந்தீர்...?? என கேட்கிறார். அதற்கு அவர் " முஹம்மது நபியின் வழி நடக்கும் முஸ்லிம் தோழர் ஒருவர், தண்டனைக்கு அஞ்சி தலைமறைவு ஆகிவிட்டார், என்று நாளை வரலாறு என்னை பழிக்கும். மேலும், இங்கே தப்பிவிடலாம். நாளை அல்லாஹ்விடம் இதை விட கொடிய வேதனை கிடைக்கும் என நான் அஞ்சினேன்" என்றார்... அடுத்து அபு தரிடம் "நீங்கள் என்ன தைரியத்தில் அவருக்கு பொறுப்பு ஏற்றீர்கள்...??" என்று கேட்டார் உமர்.. உடனே அபூதர் "முஹம்மது நபியின் வழி நடக்கும் முஸ்லிம் தோழர் ஒருவருக்கு பொறுப்பேற்க யாருமே இல்லை என்ற நிலை வந்துவிடுமோ, என அஞ்சினேன். அதனால் தான் அல்லாஹ் மீது நம்பிக்கை வைத்து பொறுப்பேற்றேன்" என்றார்... பின்னர் உமர் சரி தண்டனையை நிறைவேற்றலாம் என்றதும்... குற்றம் சாட்டியவர், "நான் அவரை மன்னித்துவிடுகிறேன் அவரை விட்டுவிடுங்கள்" என்றார். ஏனென்று கேட்டதற்கு "முஹம்மது நபியின் வழி நடக்கும் முஸ்லிம் தோழர் ஒருவர், மன்னிக்கும் மனப்பான்மை இல்லாதவராக இருந்தார் என்ற பழி என் மீது வருவதை நான் விரும்பவில்லை" என்றார். "இத்தகைய நல்ல மனிதர்களுக்கு என்னை கலிபா யாக்கிய அல்லாஹ் ஒருவனுக்கே புகழ் அனைத்தும்" என கண்ணீர் மல்க கூறினார் உமர் ரலி அவர்கள