‌சிற‌ந்த பொ‌ன்மொ‌ழிக‌ள்

, , No Comments
குழ‌ந்தைகளே, ம‌னித‌ர்க‌ள் ம‌னித‌ர்களாக வா‌ழ பல ‌சிற‌ந்த பொ‌ன்மொ‌ழிகளை மகா‌ன்களு‌ம், அ‌றி‌ந்தவ‌ர்களு‌‌ம் கூ‌றியு‌‌ள்ளன‌ர். அவ‌ற்றை படி‌த்து அத‌ன்படி வா‌ழ்‌‌ந்து கா‌ட்டுவோ‌ம்.




தா‌யி‌ற் ‌சிற‌ந்த கோ‌விலு‌ம் இ‌ல்லை, த‌ந்தை சொ‌ல் ‌மி‌க்க ம‌ந்‌திர‌ம் இ‌ல்லை.



உன‌க்கு ஒரே ந‌ண்ப‌ன் ‌நீயே, ஒரே பகைவனு‌ம் ‌நீயே, உ‌ன்னை‌த் த‌விர பகைவனு‌ம் இ‌ல்லை, ந‌ண்பனு‌ம் இ‌ல்லை



இய‌ற்கை த‌ன் வ‌ழி‌யிலேயே செ‌ல்லு‌ம், அட‌க்குத‌ல் எ‌ன்ன செ‌ய்யு‌ம்.



ச‌‌ன்மா‌ர்‌க்க‌த்‌தி‌ன் முடிவு சாகாத க‌ல்‌வியை‌த் த‌ெ‌ரி‌வி‌ப்பதேய‌‌ன்‌றி வே‌றி‌ல்லை.



தூ‌க்க‌த்தை ஒ‌ழி‌த்தா‌ல் ஆயு‌ள் ‌விரு‌த்‌தியாகு‌ம்.



அவசரமாக தவறு செ‌ய்வதை ‌விட தாமதமாக ச‌ரியாக‌ச் செ‌ய்வதே மே‌ல்



உ‌ண்மையான ந‌ட்பு ஆரோ‌க்‌கிய‌ம் போ‌ன்றது. அதை இழ‌‌க்கு‌ம் வரை அத‌ன் ம‌தி‌ப்பு தெ‌ரிவ‌தி‌ல்லை.



ம‌ற்றவ‌ர்க‌ளி‌ன் ந‌‌ற்செய‌ல்களை‌ப் பா‌ர்‌த்து ம‌கி‌ழ்‌ச்‌சி அடையாதவனா‌ல் ந‌ற்செய‌ல்களை செ‌ய்ய இயலாது.



ந‌ம்மு‌ட‌ன் வா‌ழ்வோரை‌ப் பு‌ரி‌ந்து கொ‌ள்வத‌ற்கு ந‌ம்மை முத‌லி‌ல் பு‌ரி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.



ம‌கி‌ழ்‌ச்‌சி எ‌ன்ற உண‌ர்‌ச்‌சி ம‌ட்டு‌ம் இ‌ல்லா‌‌வி‌ட்டா‌ல் வா‌ழ்‌க்கை எ‌ன்பது சும‌க்க முடியாத பெ‌ரிய சுமையா‌கி‌யிரு‌க்கு‌ம்.



மி‌ன்‌மி‌னி‌ப் பூ‌ச்‌சி எ‌வ்வளவு ஒ‌ளியுட‌ன் ‌திக‌ழ்‌ந்தாலு‌ம் அது ‌தீ ஆகாது.



ந‌ம்‌பி‌க்கை குறையு‌ம் போது ஒ‌வ்வொரு ம‌னிதனு‌ம் நெ‌றிய‌ற்ற கொ‌ள்கையை மே‌ற்கொ‌ள்‌கிறா‌ன்.



அரச‌ன் அ‌ன்று கொ‌ல்லு‌ம், தெ‌ய்வ‌ம் ‌நி‌ன்று கொ‌ல்லு‌ம்.



எ‌ளியாரை வ‌லியா‌ர் அடி‌த்தா‌ல், வ‌லியாரை‌த் தெ‌ய்வ‌ம் அடி‌க்கு‌ம்.



ஊ‌சி முனை‌யி‌ல் தவ‌ம் செ‌ய்தாலு‌ம் உ‌ன்னதுதா‌ன் ‌கி‌ட்டு‌ம்.



‌வியா‌தி‌க்கு மரு‌‌ந்து உ‌ண்டு, ‌வி‌தி‌க்கு மரு‌ந்த உ‌ண்டா



‌தினை ‌வி‌தை‌த்தவ‌ன் ‌தினை அறு‌ப்பா‌ன், ‌வினை ‌விதை‌த்தவ‌ன் ‌வினை அறு‌ப்பா‌ன்.





நட்பு பொன்மொழிகள்



நண்பர்களைப் பற்றிய பல்வேறு பொன்மொழிகள் உள்ளன. அவற்றில் ஒரு சிலவற்றை இங்கேப் பார்க்கலாம்.





நட்பு என்பது நமது ஆரோக்கியம் போன்றது. அதை இழந்த பிறகுதான் அதன் அருமையை உணர்வோம்.







பு‌த்தக‌ங்க‌ள்தா‌ன் ந‌ம்முட‌ன் பேசு‌ம் மெளன ந‌ண்ப‌ர்க‌ள்.







எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.







உன் நண்பனுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடு. ஆனால் ஒரு போதும் நண்பனை மட்டும் விட்டுக் கொடுத்து விடாதே.







வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.







உரிமை கொண்டாடும் உறவை விட, உறவைக் கொண்டாடும் நட்பே சிறந்தது.







உன் நண்பர்களைக் காட்டு.. உன்னைப் பற்றிச் சொல்கிறேன்.







பெருமை‌க்கார‌ன் கடவுளை இழ‌‌ப்பா‌ன், பொறாமை‌க்கார‌ன் ந‌ண்பனை இழ‌ப்பா‌ன், கோப‌க்கார‌ன் த‌ன்னையே இழ‌ப்பா‌ன்.







நமது நண்பர்கள் தான் நமது உண்மையான சொத்துக்கள்.







வேறு எதுவும் கிடைக்காவிட்டாலும் நீ எங்கிருந்தாலும் உன் நண்பன் உன்னை அடைவான்.







ஒவ்வொரு நண்பர்களும் புதிய உலகத்தின் வாயிற்கதவுகள்.







சிறந்த நண்பர்களாக நிறைய நாட்கள் பிடிக்கும்.







உன்னைப் பற்றி முழுதாக அறிந்திருந்தும் உன்னை விரும்புபவனே உன் நண்பன்.







ஒரு சில சமயம் உன் நண்பர்களை நீ தேர்ந்தெடுக்கிறாய். சில சமயங்களில் அவர்கள் உன்னைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.







நமது வாழ்க்கையில் பலர் கடந்து செல்கின்றனர். ஆனால் நண்பர்கள்தான் அழியாத சுவடுகளை ஏற்படுத்திவிடுகின்றனர்.







புதியவர்கள்தான் நண்பர்களாகின்றனர். ஆனால் அந்த காலம் வரு‌ம் வரை காத்திருக்க வேண்டும்.







புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். பழைய நண்பர்களையும் தொடர்பில் வையுங்கள். புதியவர்கள் வெள்ளி என்றால், பழையவர்கள் தங்கம்.







ஒரே சிந்தனையுடன் இருக்கும் இரண்டு உடல்கள் தான் நட்பு.









நட்பு என்றும் தோல்வி அடைவதில்லை, தவறு செய்வதும் இல்லை.







உங்களுக்கு நீங்களே கொடுத்துக் கொள்ளும் சிறந்த பரிசுதான் நட்பு.







உங்களை சரியான வழியில் எடுத்துச் செல்ல வந்திருக்கும் இறைத் தூதுவன்தான் நண்பன்.







பிரச்சினைகளே இல்லாமல் கூட இருந்து விடலாம். ஆனால் உலகத்தில் நண்பர்கள் இல்லாமல் இருக்க முடியாது.







சிறந்த நண்பன்தான் நமது நெருங்கிய உறவினன்.







புத்தகங்களும், நண்பர்களும் குறைவாக இருந்தாலும் சிறந்ததாக இருக்க வேண்டும்.







காதலுக்கு கண் இல்லை. அந்த கண்களை திறந்து வைப்பது நட்புதான்.







நண்பர்களைக் கொண்டு இரு. நண்பனாக இரு.







நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது பலரை அறிவாய், துக்கத்தில் மட்டுமே நண்பர்களை அறிவாய்.







நீ கவலையில் இருக்கும்போது, முத்தம், கடிதம், அணைத்தல் என எதுவும் தராத ஒரு நிம்மதியை உன் நண்பனது அமைதி தரும்.







நண்பர்களுக்குள் மன்னிப்புக்கும், நன்றிக்கும் இடமில்லை.







உன் மனதிற்குள் இருக்கும் பாடலை அறிந்தவனே நண்பன். எப்போது நீ ஒரு சில வார்த்தைகளை மறக்கிறாயோ அப்போது உன் நண்பன் அந்த வார்த்தையை எடுத்துக் கொடுப்பான்.







எனக்கு முன்னாடி நடந்து செல்லாதே, உன்னை பின்பற்றி வர நான் விரும்பவில்லை, என் பின்னாடி நடந்து வராதே, உனக்கு முன்னோடியாக இருக்க விரும்பவில்லை, என்னுடனே நடந்து வா என் நண்பனாக.







புதிதாக இருக்கும் நட்பு கரும்பு போன்றது. அதுவே உண்மையான நட்பாகும்போது சர்க்கரையாக இனிக்கிறது ஆனால் உனக்கொன்று தெரியுமா? அதுவே நீயாகும்போது நட்பு எனக்கு தேனாகிறது.







உண்மையான நண்பனை அறிவது மிகக் கடினம். உனக்கு சாமர்த்தியம் அதிகம்... நீ என்னை அறிந்துள்ளாய்.







நட்பு நீ நிற்கும் போது உன்னை உற்சாகப்படுத்தி இயக்க வைக்கும், தனிமையை இனிமையாக்கும், தேடும்போது வழிகாட்டியாகும், கவலையை போக்கி சிரிக்க வைக்கும், சந்தோஷத்தில் பா‌ட்டு‌ப் பாடும்.







0 comments:

Post a Comment