அதிசய வழக்கு

ஒருநாள் இரு சகோதரர்கள், செய்யதுனா தாவூத் (அலைஹிஸலாம்) அவர்கள் முன் வந்து "நபி அவர்களே, எங்களின் தந்தையார் எங்கள் இருவர் மீதும் ஒத்த அன்புடையவராக இருந்தார். ஆனால் அவர் இறப்பு படுக்கையில் கிடக்கும்போது எங்களை அருகில் அழைத்து எங்களுக்கு அறிவுரை பல வழங்கினார். இறுதியாக இறக்கும் முன் எங்களை பார்த்து "என் சொத்து அனைத்தும் உங்களில் ஒருவனுக்கே உரியதாகும்." என்று கூறினார். அது யார் என்று கூறவில்லை. எனவே அவரது சொத்து அனைத்தும் யாருக்கு உரியது என்று அறியாது விழிக்கிறோம்" என்று கூறினார்கள். எவ்வாறு இவ்வழக்கில் நீதி பகர்வது என்று செய்யதுனா தாவூத் (அலைஹிஸலாம்) அவர்கள் யோசித்தார்கள். அப்போது அங்கிருந்த செய்யதுனா சுலைமான் (அலைஹிஸலாம்) அவர்கள், "தந்தையே! நீங்கள் ஆணை இடின் இதற்கான தீர்ப்பை நான் வழங்குகிறேன்" என்று கூறினர். "நல்லது செய்யும்" என்றனர் செய்யதுனா தாவூத் (அலைஹிஸலாம்) அவர்கள்.

உடனே செய்யதுனா சுலைமான் (அலைஹிஸலாம்) அவர்கள் அவ்விருவரையும் நோக்கி, "நீங்கள் இருவரும் சென்று உங்களின் தந்தையின் அடக்கவிடத்தை தோண்டி அவருடைய உடலிலிருந்து ஓர் எலும்பை எடுத்து வந்தால் இதற்கான தீர்ப்பை நான் வழங்குகிறேன்" என்றனர்.

அதற்கு மூத்தவன் "என் உயிர் போகினும் நான் அச்செயலை செய்ய மாட்டேன். நான் அச்செயலை செய்து சொத்துரிமை பெற விரும்பவும் இல்லை" என்றான். ஆனால் இளையவனோ ஓடோடி சென்று அதை எடுத்து வந்தான்.

அப்போது செய்யதுனா சுலைமான் (அலைஹிஸலாம்) அவர்கள் அவ்விருவரையும் நோக்கி "நீங்கள் இருவரும் ஊசியால் உங்களின் விரலில் குத்தி இரத்தம் எடுத்து அந்த எலும்பின் மீது விடுங்கள்" என்றனர்.

அப்போது மூத்தவன் மிக்க கவலையோடு கண்ணீர் விட்டவனாக இரத்தம் எடுத்து விட்டான். அத்துடன் சேர்ந்து கண்ணீரும் அதன் மீது விழுந்தது. அடுத்த கணம், கண்ணீருடன் சேர்ந்த செந்நீரை, தணலிடை பதிக்கப்பட்ட இரும்பின் மீது கொட்டிய தண்ணீரை இரும்பு உண்பது போல் அவ்வெலும்பு உண்டது.

பின்னர் இளையவனும் அவ்வாறு செய்தான். அவனது இரத்தமோ அவ்வெலும்பின் மீது வழிந்தோடியது.

அப்போது செய்யதுனா சுலைமான் (அலைஹிஸலாம்) தீர்ப்பு வழங்கினார்கள். "இறந்த தந்தையின் உடலில் இருந்து எலும்பு ஒடித்து வர விரும்பாத மூத்தவனே அவருக்கு முறைப்படி பிறந்தவன். பின்னவன் அவர் மகன் அல்ல. எனவே மூத்தவனுக்கே சொத்து அனைத்தும் உரித்து"

தீர்ப்பை கேட்டு தன் தாயிடம் ஓடோடி சென்று நடந்ததை கூறினான் இளையவன். அப்போது தாய் தன் மகனை நோக்கி "உண்மை! ஓர் இரவு தீயோன் ஒருவன் நம் இல்லம் புகுந்து தகா முறையில் வன்முறையில் என்னை புணர்ந்தான். நீ பிறந்தாய்" என்று கண்ணீர் மல்க கூறினாள். "தந்தைக்கு தெரியுமா?" என்றான் இளையவன். "குறிப்பால் இதனை அறிந்துக்கொண்டார். எனினும் இதை பற்றி அவர் என்னிடம் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை" என்று கூறி தேம்பி தேம்பி அழுதாள் அவள்.
அபூ யஸீத் பிஸ்தாமி ரஹ்மாதுல்லாஹி அலைஹி அவர்கள் மாபெரும் ஆன்மீக மகான். ஒரு நாள் அவர்களுக்கும் ஒரு யூத மதகுருவுக்கும் ஒரு யூத கோயிலில் ஏராளமான யூதர்கள் முன்னிலையில் ஒரு உரையாடல் நிகழ்ந்தது. அப்போது அந்த யூத மதகுரு இவர்களை நோக்கி, "ஏ முஸ்லிமே!! நான் உம்மிடம் சில கேள்விகள் கேட்கிறேன். அதற்கு நீர் சரியான பதிலை கூறினால் நாங்கள் உமக்கு வழிப்படுவோம். இல்லையெனில் உம்மை எம் வாளுக்கு இரையாக்குவோம்" என்று கூறினார். அதற்கு அபூ யஸீத் பிஸ்தாமி ரஹ்மாதுல்லாஹி அலைஹி அவர்கள் " நல்லது. அவ்விதமே செய்யுங்கள். தங்களின் கேள்வி அறிவுக்கு ஏற்றதாயினும் சரியே, ஏற்றதாயில்லாமல் இருப்பினும் சரியே பதில் கூறுகிறேன் " என்று அடக்கத்துடன் கூறினார்கள்.

இதன் பின் அவர்களிடையே பின்வரும் உரையாடல் நிகழ்ந்தது.

மதகுரு: ஒன்று உண்டு. இரண்டில்லை அது என்ன?

அபூ யஸீத்: அல்லாஹ்
மதகுரு: இரண்டு உண்டு. மூன்றில்லை அது என்ன?

அபூ யஸீத்: இரவும், பகலும்.
மதகுரு: மூன்று உண்டு. நான்கு இல்லை அது என்ன?

அபூ யஸீத்: அர்ஷு, குர்ஷு, கலம்
மதகுரு: நான்கு உண்டு ஐந்து இல்லை அது என்ன?

அபூ யஸீத்: தவ்ராத், சபூர், இஞ்சீல், புர்கான்
மதகுரு: ஐந்து உண்டு ஆறு இல்லை அது என்ன?

அபூ யஸீத்: ஐந்து கடமைகள் அல்லது ஐந்து வேளை தொழுகை.

மதகுரு: ஆறு உள்ளது ஏழு இல்லை அது என்ன?

அபூ யஸீத்: திட்டமாக நாம் வானங்களையும், பூமியையும் நடுவில் உள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தோம் என்ற திரு குர்ஆன் வசனத்தை ஓதினர்.
மதகுரு: ஏழு உள்ளது எட்டு இல்லை அது என்ன?

அபூ யஸீத்: ஏழு வானங்களையும் நாம் அடுக்கடுக்காக படைத்தோம் என்ற திரு குர்ஆன் வசனத்தை ஓதினர்.
மதகுரு: எட்டு உள்ளது ஒன்பது இல்லை அது என்ன?

அபூ யஸீத்: அர்ஷை எட்டு வானவர்கள் சுமந்து கொண்டுள்ளனர் என்ற திரு குர்ஆன் வசனத்தை ஓதினர்.
மதகுரு: ஒன்பது உள்ளது பத்து இல்லை அது என்ன?

அபூ யஸீத்: ஒன்பது மனித கூட்டத்தினர் உலகில் குழப்பம் விளைவித்தனர் என்ற திரு குர்ஆன் வசனத்தை ஓதினர்.
மதகுரு: பூர்த்தியான பத்து உள்ளது பதின்னொன்று இல்லை அது என்ன?

அபூ யஸீத்: ஹஜ்ஜு செய்து விட்டு குர்பான் கொடுக்க இயலாதவர்கள் அங்கு மூன்று நோன்புகளும், ஊர் திரும்பியதும் ஏழு நோன்புகள் பிடித்து பத்து நோன்புகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற திரு குர்ஆன் வசனத்தை ஓதினர்.
மதகுரு: பதின்னொன்று என்ன?

அபூ யஸீத்: யூசுப் அலைஹிசலாம் அவர்களின் பதினொரு அண்ணன்மார்கள்.
மதகுரு: பன்னிரண்டு என்ன?

அபூ யஸீத்: ஆண்டின் பன்னிரண்டு மாதங்கள்.
மதகுரு: பதின்மூன்று என்ன?

அபூ யஸீத்: யூசுப் அலைஹிசலாம் அவர்கள் கண்ட கனவு. நான் பதினொரு நட்ச்சத்திரங்களையும், சூரியனையும், சந்திரனையும் பார்த்தேன் என்ற திரு குர்ஆன் வசனத்தை ஓதினர்.
மதகுரு: வஸ்ஸாரியாத்திஸர்வா என்றால் என்ன?

அபூ யஸீத்: அது நான்கு வகை காற்று.
மதகுரு: fபல் ஹாமிலாத்தி விக்ரா என்றால் என்ன?

அபூ யஸீத்: இடி.
மதகுரு: fபல் ஜாரியாத்தி யுஸ்ரா என்றால் என்ன?

அபூ யஸீத்: கடலில் செல்ல கூடிய படகு.
மதகுரு: fபல் முகஸ்ஸீமாத்தி அம்ரா என்றால் என்ன?

அபூ யஸீத்: ஷஅபான் பதின்னைந்தாம் இரவு இரணத்தை பங்கிடும் வானவர்கள்.

மதகுரு: உயிர் இல்லாது பேசும் பதின்நான்கு பொருள்கள் என்ன?

அபூ யஸீத்: ஏழு வானமும், ஏழு பூமியும் இறைவனுடன் பேசுகின்றன என்ற திரு குர்ஆன் வசனத்தை ஓதினர்
மதகுரு: ஒரு புதைகுழி. தன்னில் அடக்கப்பட்ட ஒருவரை தூக்கி கொண்டு அலைந்தது அது என்ன?

அபூ யஸீத்: யூனுஸ் அலைஹிசலாம் அவர்களின் மீன்.
மதகுரு: உயிரில்லாது மூச்சி விடுவது யாது?

அபூ யஸீத்: வைகறை நேரம். வைகறை நேரம் மூச்சு விடுகிறது
என்ற திரு குர்ஆன் வசனத்தை ஓதினர்.
மதகுரு: விண்ணில் இருந்தோ மண்ணில் இருந்தோ வராத தண்ணீர் என்ன?

அபூ யஸீத்: சுலைமான் நபி அவர்கள் பல்கீசுக்கு அனுப்பிய குதிரையின் வியர்வை நீர்.
மதகுரு: இறைவன் ஒன்றை படைத்து ஒன்றை வெறுத்தான் அது என்ன?

அபூ யஸீத்: கழுதையின் குரல்.
மதகுரு: ஹஜ் கடமையாக இல்லாத போதிலும் அது ஹஜ்ஜும், தவாபும் செய்தது அது என்ன?

அபூ யஸீத்: நூஹ் நபியின் கப்பல்.
மதகுரு: நான்கு பொருள்கள் உள்ளது அவற்றுக்கு மூலம் ஒன்றாயினும் அதின் ருசியும், நிறமும் வெவ்வேறானவை. அது என்ன?

அபூ யஸீத்: கண்களும் காதுகளும் மூக்கும் வாயும் ஆகும். கண்ணீர் கைப்பு, மூக்கு நீர் புளிப்பு, காதின் நீர் கசப்பு, வாய் நீர் இனிப்பு இவை அனைத்திற்கும் மூலம் மூளை.
மதகுரு: ஜின் மனிதர் வானவர் ஆகியோரல்லாத ஒன்றின் மீது இறைவன் வஹி இறக்கி வைத்தான். அந்த ஒன்று யாது?

அபூ யஸீத்: தேனீ .


மதகுரு: தகப்பனின் முதுகுதண்டில் இருந்தோ தாயின் வயிற்றிலிருந்தோ வராத நான்கு உயிர் பிராணிகள் யார்?

அபூ யஸீத்: இஸ்மாயில் அலைஹி ஸலாம் அவர்களுக்காக வந்த ஆடு, ஸாலிஹ் அலைஹி ஸலாம் அவர்களின் ஒட்டகம், ஆதம் அலைஹி ஸலாம், ஹவ்வா அலைஹி ஸலாம்.
மதகுரு: பொய் சொல்லி சுவனம் புகுந்த கூட்டம் எது?

அபூ யஸீத்: யூஸுப் அலைஹி ஸலாம் அவர்களின் பதின்னொரு அண்ணன்மார்கள். "பொய்யான இரத்தத்தை சட்டையில் தடவிக் கொண்டு வந்தார்களே அவர்கள்" என்ற திரு குர்ஆன் வசனத்தை அவர்கள் ஓதினர்.
மதகுரு: உண்மை கூறி நரகம் புகுந்தவர்கள் யார்?

அபூ யஸீத்: யூதரும், நசாறாக்களும், "அவர்கள் உண்மையானவர்கள் என்றும் அவர்களை தாம் நரகத்திற்கு அனுப்பியதாகவும் இறைவன் கூறும் திருவசனத்தை ஓதி காட்டினார்கள்.
மதகுரு: இறைவன் ஒன்றை படைத்து அதை வெறுத்தான் அது என்ன?

அபூ யஸீத்: கழுதையின் குரல். "திட்டமாக நாம் கழுதையின் குரலை வெறுக்கிறோம்" என்ற திரு குர்ஆன் வசனத்தை அவர்கள் ஓதினர்.
மதகுரு: இறைவன் ஒன்றை படைத்து அதை மேன்மைபடுத்தினான் அது என்ன?

அபூ யஸீத்: அது பெண்களின் சூழ்ச்சியாகும்."அவளின் சூழ்ச்சி மேலானதாக இருந்தது" என்ற திரு குர்ஆன் வசனத்தை அவர்கள் ஓதினர்.
மதகுரு: பெண்களில் மேலானவர் யார்?

அபூ யஸீத்: ஹவ்வா அலைஹி ஸலாம், கதீஜா ரலியல்லாஹு அன்ஹா, ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா, ஆசியா, மர்யம் அலைஹி ஸலாம் ஆகியோர்.
மதகுரு: ஆறுகளில் சிறந்தவை எவை?

அபூ யஸீத்: ஸய்ஹூன், ஜைஹூன், புராத், நீலநதி.
மதகுரு: மலைகளில் சிறந்தது எது?

அபூ யஸீத்: தூர் ஸீனா
மதகுரு: மிருகங்களில் சிறந்தது எது?

அபூ யஸீத்: குதிரை.
மதகுரு: மாதங்களில் சிறந்தது எது?

அபூ யஸீத்: ரமலான்.

மதகுரு: அல்தாமியா என்றால் என்ன?

அபூ யஸீத்: உலக முடிவு நாள்.
மதகுரு: ஒரு மரம் உள்ளது. அதற்கு பன்னிரண்டு கிளைகள் உள்ளன. ஒவ்வொரு கிளையிலும் முப்பது இலைகளும், ஒவ்வொரு இலையிலும் ஐந்து பூக்களும் உள்ளன. அவற்றில் இரண்டு வெயிலிலும் மூன்று நிழலிலும் உள்ளன. அது என்ன?

அபூ யஸீத்: மரம் ஓராண்டாகும். பன்னிரண்டு கிளைகள் பன்னிரண்டு மாதங்களாகும். முப்பது இலைகள் முப்பது நாட்களாகும். ஐந்து பூக்கள் ஐவேளை தொழுகையாகும். அவற்றில் இரண்டு பகலிலும் மூன்று இரவிலும் நிகழ்த்தப் பெறுகின்றன.
மதகுரு: ஸபத், லபத் என்றால் என்ன?

அபூ யஸீத்: செம்மறி, வெள்ளாடு ஆகியவற்றின் மயிர்.
மதகுரு: தம், ரம் என்றால் என்ன?

அபூ யஸீத்: ஆதம் அலைஹி ஸலாம் அவர்களைப் படைப்படதற்கு முன்பிருந்த இனத்தவர்களின் பெயர்களாகும்.
மதகுரு: கழுதை கத்தினால் அதன் பொருள் என்ன?

அபூ யஸீத்: கழுதை ஷைத்தானை பார்த்து சபிக்கிறது.
மதகுரு: நாய் குரைப்பதன் பொருள் என்ன?

அபூ யஸீத்: நரகவாசிகளுக்கு வைல் என்ற ஓடை உள்ளது என்று அது குரைக்கின்றது.

மதகுரு: குதிரை கனைப்பதன் பொருள் என்ன?

அபூ யஸீத்: "அல்லாஹ் பொய் பரவும் பொழுது என்னை
காப்பானாக" என்று அது கூறுகின்றது.
மதகுரு: ஒட்டகம் கத்துவதன் பொருள் என்ன?

அபூ யஸீத்: "இறைவன் எனக்கு போதுமானவன்" என்று கத்துகின்றது.
மதகுரு: புல் புல் கத்துவதன் பொருள் என்ன?

அபூ யஸீத்: இறைவன் தூய்மையானவன் என்று கூறுகின்றது.
இப்படியாக அந்த மதகுரு கேட்ட கேள்விகளுக்கு அவர் வாய் மூடும் முன் பதில் குடுத்து கொண்டு இருந்த மகான் அபூ யஸீத் பிஸ்தாமி ரஹ்மாதுல்லாஹி அலைஹி அவர்கள் அந்த மதகுருவை பார்த்து கேட்டார்கள், "சுவர்க்கத்தின் திறவு கோல் என்ன?" என்று. உடனே அந்த மதகுருவும், அங்கிருந்த யூதர்கள் அனைவரும் எழுந்து , சுவனத்தின் திறவு கோல் "லாயிலாஹா இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹி" என்ற கலிமாவை கூறி அனைவரும் புனித இஸ்லாத்தை தழுவினார்கள். அல்லாஹு அக்பர்!!


ஊரெங்கும் நாளை வர இருக்கும் பெருநாளுக்காக சந்தூஷமும், குதூகலமும் கொப்பளிக்க மக்கள் தயாராகி கொண்டு இருக்கின்றனர். இருலோக இரட்சகரான முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் அருந்தவப்புதல்வி சுவர்கலோக தலைவி பாத்திமா நாயகி திருக்குர்ஆன் வசனங்களை ஓதியவர்களாக எளிய ஒட்டுப்போட்ட ஆடையில் திரிகையில் கோதுமை அரைத்தவகர்கலாக உள்ளார்கள். இந்த கோதுமையும் எப்படி வந்தது என்றால்...

வெளிய சென்று வீடுதிரும்பிய அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பாத்திமா உண்பதற்கு ஏதும் உணவு இருக்கின்றதா? என வினவ இருவேளை பட்டினிதான், குழந்தைகளும் பட்டினியோடு தான் விளையாண்டு கொண்டுள்ளனர். கோதுமையோ, மாவோ எதுவும் இல்லை என பாத்திமா நாயகியார் பணிவுடன் பதிலளிகிரார்கள். உடனே வெளியே கிளம்பிய அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் எதாவது வேலை கிடைக்குமா என்று தேடி அலைகின்றார்கள். முடிவில் ஒரு யூதன் தன ஒட்டகத்திலிருந்து ஏராளமான மூட்டைகளை இறக்குவதற்கு யோசனையில் இருக்கையில் அய்யா ! ஏதும் வேலை இருக்கின்றதா ? என்று குரல் கேட்டு திரும்பிய யூதன் ஆம் அந்த பொதி மூட்டைகளை இறக்கி உள்ளே அடுக்க வேண்டும்.

அடுத்த சில நிமிடங்களில் பசியையும் பொருட்படுத்தாது வேலையை கட்சிதமாக முடித்து வேர்வை வழிய தம்முன் நின்ற அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கையில் ஒரு திர்ஹம் தருகிறான் அந்த யஹூதி. சட்டென்று தம் உள்ளங்கைகளை மூடியவர்களாக விருவிருவென நடக்க ஆரம்பித்தார்கள்.

பேரம் ஏதும் பேசாமல் கொடுத்ததை வாங்கிக் கொண்டு போகிறாரே என யஹூதி திகைப்புடன் விழிகள் விரிய நிற்கின்றான். அவனுக்கு எங்கே தெரியபோகின்றது... அவசரமாக போனால் தனி கடை மூடும் முன் கோதுமையோ, மாவோ வாங்க முடியும். தேடிப்பிடித்து அவ்வாறே கடைசியாக சாதபூகும் முன் ஒரு டிர்ஹதை கடைக்காரனிடம் கொடுத்தால் கடைக்காரன் அதற்கு சிறிது கோதுமையை தருகின்றான். ஓட்டமும் நடையுமாக வீடு வந்து கொடுத்த கோதுமைதான் பாத்திமா நாயகி அவர்கள் அரைத்துக் கொண்டுள்ள கோதுமை. இது மாவனா பின்பு ரொட்டி சுட்டு எல்லோரம் பசியாற வேண்டும்.

இந்நிலையில் விடிந்தால் பெருநாள், பெருமானாரின் கண்மணிகளான இமாம் ஹசனாரும், ஹுசைனாரும் துள்ளி குதித்தவாறே உள்ளே வந்தார்கள். அன்னை பாத்திமாவை கட்டி அணைதவர்களாக அம்மா பெருநாளுக்கு உடுத்தி கொள்ள எங்களுக்கு புத்தாடைகள் இருக்கின்றனவா? என ஆவலுடன் கேட்டனர். சுவனத்தின் தலைவி பாத்திமா நாயகி ஆம் அல்லாஹ் தருவான் என பதில் உரைத்தார்கள். இப்பதிலில் திருப்தி அடைதவர்கலாக பாத்திமா நாயகியின் குலக்கொளுந்துகலான இருவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

சுப்ஹு தொழுகைக்கு தயாராகி செவ்வனே தொழுகையை முடித்து தம் இரு கரமேந்தியவர்களாக, யா அல்லாஹ் ! அகிலங்கள் அனைத்தையும் படைத்தது பிரபாலிப்பவனே ! உன் சிருஷ்டிகள் மீது உன்னையன்றி யார் கருணை புரிவார், உன் ஹபிபும் மஹ்பூபுமான ரசூல்லுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் பொருட்டால் பிள்ளைகள் இருவருக்கும் புத்தாடை வழங்குவாயாக ! என்னை இக்கட்டிலிருந்து காப்பாற்றுவாயாக ! என இறையஞ்சியாவரே இருக்கையில் வாசலில் யாரோ அழைக்கும் குரல் கேட்டு விரைகிறார்கள். தூய வெள்ளாடை உடுத்திய பெரியவர் இந்தாருங்கள் என பொட்டலத்தினை அளிக்கிறார்கள். பொட்டலத்தை பிரித்து பார்க்கையில்... அம்மா புத்தாடைகள் எங்களுக்கு தாருங்கள் நாங்கள் குளித்து விட்டோம் ! என சந்தோசத்துடன் கூறிய குழந்தைகளுக்கு புத்தாடைகளை எடுத்து அளிக்கின்றார்கள். வல்ல நாயனுக்கு நன்றி செய்தவர்களாக.


அருமை நண்பர்களே ! நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் ஈரக்குலைக்கு ஒப்பான அன்பு மகள் பாத்திமா நாயகி அவர்களுக்கு செல்வதிருக்கோ, தேவையானவற்றை அளிப்பதிலோ எந்த குறையும் வைக்க மாட்டான் வல்ல நாயன். எனினும் வறுமையை அவர்களாகவே விரும்பி ஏற்றி கொண்ட ஒன்று. அவ்வாறு உலக ஆசைகளையும், தேவைகளையும் வெறுத்தார்கள். எளிமையே விரும்பினார்கள். பணிவும் ஷுகூர் செய்யும் பண்பும் தவக்களும் மிகைத்தவர்களாக வாழ்ந்தார்கள். எல்லாவற்றிக்கும் மேலாக வஸிலா தேடுவதின் பாங்கையும், சிறப்பையும் இங்கே நாம் அனைவரும் உணர வேண்டும்.

நாகத்தின் பொருட்டாலும், சுவர்கலோகத் தலைவி அன்னை பாத்திமா நயகியாரின் பொருட்டாலும் இருலோக நன்மைகளை நம் அனைவருக்கும் அல்லாஹ் வழங்குவானாக !!! ஆமீன் ! ஆமீன் ! ஆமீன் ! பி ஜாஹே சையதில் முர்ஸலீன் !!!
--- Retrieved information from - "Dargah" Quaterly Magazine --- March - 2010
ஒரு நாள் இப்ராஹீம் பின் அத்ஹம் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கடற்கரையில் அமர்ந்து தனது கிழிந்த ஆடைகளை தைத்துக்கொண்டிருந்தார்கள். அவ்வழியே வந்த பல்க் நாட்டு அமைச்சர் ஒருவர் தனது அரசராக இருந்த இப்ராஹீம் பின் அத்ஹம் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் இன்றைய நிலையை பார்த்து மனதுக்குள் அரச போகத்தை விட்டு விட்டு இப்படியொரு ஏழ்மையை எந்த புத்திசாலியாவது விரும்புவானா? என்று அங்கலாய்த்தார். இதை உள்ளுணர்வு மூலம் அறிந்த இப்ராஹீம் பின் அத்ஹம் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தங்களின் கையிலுள்ள ஊசியை அந்த அமைச்சர் பார்க்கும் வகையில் கடலில் வீசிவிட்டு "கடல்வாழ் மீன்களே என் ஊசியை எடுத்து வாருங்கள்" என்று குரல் கொடுத்தார்கள். இவர்களின் குரலை கேட்ட லெட்சக்கணக்கான மீன்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தங்க ஊசியை வாயில் கவ்விக்கொண்டு கடலின் கரைக்கே வந்து "இதோ ஊசியை கொண்டுவந்தோம்" என்று கூறின. இப்ராஹீம் பின் அத்ஹம் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள், "யா அல்லாஹ்! நான் கடலில் வீசிய எனது ஊசித்தான் எனக்கு வேண்டும்" என்று கேட்டார்கள். உடனே ஒரு மீன் அவர்கள் வீசிய அதே ஊசியை எடுத்து கொணர்ந்து ஆஜர்படுத்தியது. அப்பொழுது இப்ராஹீம் பின் அத்ஹம் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அந்த அமைச்சரை பார்த்து, "மன அரசாட்சி மேலானதா? இல்லை கேவலம் மண் அரசாட்சி மேலானதா?" என்று கேட்டார்கள். இதனை கண்ணுற்ற அமைச்சர் கடல் மீன்கள் கூட இறை நேசரை அடையாளம் கண்டுபிடித்து விடுகிறது. அவைகளோ சாதாரண உயிரினம். நாம் மனிதனாக இருந்தும் கூட இக்காலத்து இரைநேச தலைவரை தெரிந்து கொள்ளவில்லையே என்று மனம் வருந்தியவராக ஸலாம் கூறி திரும்பி சென்றுவிட்டார்.
சூபிகளை பற்றி ஒரு இளைஞர் எந்நேரமும் குறைகூறிக்கொண்டிருந்தார். ஒருநாள் அவர் ஹழ்ரத் துன்னூன் மிஸ்ரி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களை காண வந்தார். அப்பொழுது அவர்கள் அவரிடம் தாம் அணிந்திருந்த மோதிரத்தை கொடுத்து அதை ஒரு மளிகை கடைக்காரனிடம் கொடுத்து ஒரு தீனாருக்கு அடமானம் வைத்து தேவையான மளிகை பொருள்களை வாங்கிவருமாறு பணித்தார்கள். இளைஞரும் அதனை எடுத்துக்கொண்டு சென்று மளிகை கடைக்காரனிடம் அடமானம் வைக்க முற்பட்ட பொழுது, "இதற்கு ஒரு தீனார் தர இயலாது ஒரு திர்ஹம்தான் தர இயலும்" என்று கூறிவிட்டான் கடைக்காரன். அவர் உடனே துன்னூன் மிஸ்ரி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடம் திரும்பி வந்து நடந்ததை கூறினார். உடனே அவர்கள் அதனை நகை வியாபாரியிடம் சென்று விலை பேசி வருமாறு கூறினார்கள். அவரும் அதனை எடுத்துக்கொண்டு நகை வியாபாரியிடம் சென்ற பொழுது, "அம்மோதிரம் ஆயிரம் தீனார் விலை மதிப்புள்ளது" என்று கூறினார். இளைஞர் அதனை துன்னூன் மிஸ்ரி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடம் வந்து கூறினார். உடனே அவர்கள் அவரை நோக்கி, "இந்த மோதிரத்தை பற்றி மளிகை கடைக்காரனுக்கு எவ்வளவு தெரியுமோ அவ்வளவே உமக்கும் சூபிகளை பற்றி தெரியும்" என்று கூறினார்கள். அது கேட்டு அந்த இளைஞர் வெட்கி தலை குனிந்தார். அவர்களிடம் மன்னிப்பு கேட்டார்.

பாம்பின் கால் பாம்பறியும் என்று முதுமொழி. சான்றோரை சான்றோரே அறிவர். கீழ்தர மக்களுக்கு மேன்மக்களை பற்றி என்ன தெரியும்.

இதுவே இன்றைய வஹாபிகளின் நிலையாகும். எந்த அறிவும் அற்ற இந்த வஹாபிகள் மேன்மை மிக்க சூபியாக்களை குறை கூறுவது இதனாலேதான்.
இறைநேசம் உள்ளத்தில் குடிக்கொண்ட பின்னர் மற்றெல்லாம் வெறுப்பாகவே காட்சியளிக்கும்.

இதற்கு ஒரு எடுத்துக்காட்டாக பத்ருப்போர் முடியும்வரை ஹழ்ரத் அபூபக்கர் சித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மகன் இஸ்லாத்தை ஏற்கவில்லை. அதன்பின் தான் அவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். ஒரு நாள் ஹழ்ரத் அபூபக்கர் சித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும், மகனாரும் பத்ருப்போரை பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். அது சமயம் மகனார் தந்தையிடம், "தந்தையே! பத்ருப்போரில் நான் காபிர்கள் அணியில் சேர்ந்து போர்செய்த நேரம் பலதடவை தங்களை கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. என் வாழ் அருகே நீங்கள் பலதடவை வந்துவிட்டீர்கள். ஆயினும் நான் தந்தையாயிற்றே என்று எண்ணி தங்களை விட்டுவிட்டேன்" என்றார். இதனை கேட்ட ஹழ்ரத் அபூபக்கர் சித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், "அதே சந்தர்ப்பம் அப்போது எனக்கு கிடைத்திருக்குமானால் உன்னைக்கொல்லாமல் விட்டிருக்கமாட்டேன்" என்றார்கள். இறை நேசம் பிள்ளை பாசத்தையும் மிஞ்சிவிட்டதல்லவா?   
அலி அக்பர் ரலியல்லாஹு அன்ஹு ஹழ்ரத் ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் இரண்டாவது மகனாவார்கள். அவர்கள் உருவ அமைப்பில் தம் பாட்டனார் நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அன்னவர்களை ஒத்தியிருந்தனர்.

கர்பலாவில் போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்தது. ஹழ்ரத் ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் சகோதரர் அப்பாஸ் இறந்ததும், இவர்கள் தம் தந்தையாரின் அனுமதி பெற்று போருக்குப் புறப்பட்டனர். ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும், மகனாருக்காக துஆச் செய்து குதிரை மீதமர்த்தி அனுப்பி வைத்தனர். வீராவேசத்துடன் மின்னலாய் பரந்த அலி அக்பர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் "நான் அலியின் மகன் ஹுசைனின் மகன் அலியாவேன்" என்று சப்தமிட்டுக் கொண்டே சென்று எதிரிகளுள் இருபது பேர்களுக்கு அதிகமானோரை வெட்டி வீழ்த்தினர்.

கடுமையான வெயில், தாக மேலிட்டால் தவிக்கும் நிலை ஏற்பட்டது. அப்பொழுது அவர்கள் தமக்கு நேரிட்ட தாகத்தின் கடுமையை தம் தந்தையிடம் எடுத்துரைக்க, ஹழ்ரத் ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களின் நாக்கை நீட்டி அதிலுள்ள நீரை மகனைப் பருகுமாறு செய்தார்கள். அதனைத் தவிர்த்து அவர்களுக்கு அப்பொழுது வேறு வழி தெரியவில்லை.

அதன் பின்னர் அலி அக்பர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மீண்டும் களத்தில் குதித்தார்கள். அப்பொழுது எதிரி ஸினான் இப்னு அனஸ் என்பவனது ஈட்டி அவர்களின் முதுகில் பாய்ந்த்தது. குதிரையிலிருந்து கீழே விழுந்த அவர்கள், தந்தை ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் பார்த்து, "அருமை தந்தையே! என் பாட்டனார் முஹம்மது சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் சுவனத்து பானத்துடன் என்னை அழைக்கிறார்கள்!" என்று கூறிய பின்னர் உயிர் விட்டார்கள். அப்பொழுது அவர்களுக்கு வயது பதினெட்டு.

தம் மகனின் உடலை தம் கூடாரத்திட்குக் கொண்டுவந்த ஹழ்ரத் ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இறைவனின் முன் மண்டியிட்டு, "யா அல்லாஹ்! என்னிடம் ஒரே ஒரு அலி அக்பர்தாம் இருந்தார். அவரையும் உன்னுடைய பாதையில் நான் தியாகம் செய்து விட்டேன். இன்னும் நூறு அலி அக்பர்கள் எனக்கு மக்களாக இருப்பினும் அவர்களையும் நான் உனது பாதையில் தியாகம் செய்வேன்" என்று கூறிக் கண்ணீர் சிந்தினர். 

மாமேதை ஹஸன் பஸரி (ரலியல்லாஹு அன்ஹு ) அவர்கள் கூறுகிறார்கள். நான் வாலிபர் ஒருவருடன் பஸரா நகர வீதியொன்றில் சென்றுக் கொண்டிருந்தேன். வழியில் மருத்துவர் ஒருவர் ஒரு நாற்காலியில் அமர்ந்துக் கொண்டிருக்க ஆண்களும்,, பெண்களும், ,, சிறுவர்களும் அவரைச் சுற்றிலும் நின்றுக் கொண்டு தத்தம் நோய்களைப் பற்றி அவரிடம் கூறி மருந்துக்களை வாங்கிக் சென்று கொண்டிருந்தனர்.

அப்பொழுது என்னுடன் வந்த வாலிபர் அம்மருத்துவரிடம் சென்று மருத்துவரே! பாவங்களை கழுவி சுத்தப்படுத்தி இதய நோய்க்கு நிவாரணம் அளிக்கும் மருத்துவம் தங்களுக்கு தெரியுமா? என்று கேட்டார்.

ஆம். எமக்கு தெரியும் என்று கூறிய அவர், என்னிடமிருந்து பத்து பொருட்களை பெற்றுக் கொள்வீராக! முதலில் ஏழ்மை எனும் மரத்தின் வேரையும் , பணிவு எனும் மரத்தின் வேரையும் சேர்த்து அத்துடன் பச்சாதாபம் என்னும் கடுக்காயை கலந்து பின்னர் அவற்றை இறைப் பொருத்தம் எனும் உரலில் இட்டு போதுமாக்கிக் கொள்ளுதல் எனும் உலக்கையால் அவற்றை இடித்துப் பொடியாக்கி கொள்வாயாக!

பிறகு இறைபக்தி எனும் சட்டியிலிட்டு நாணம் எனும் நீரை அதில் ஊற்றி இறைநேசம் எனும் நெருப்பின் மூலம் அதனை சூடேற்றி கொதிக்க வைப்பாயாக!

பின்னர் அதனை நன்றியெனும் கோப்பையில் ஊற்றி நல்லாதரவு எனும் விசிறியினால் அதனை வீசி ஆற வைத்து புகழ் எனும் கரண்டியினால் எடுத்து அதனை பருகிவிடுவாயாக!

இவ்வாறு நீ செய்து வந்தால் ஈருலகை சேர்ந்த எல்லா வித நோய்களும் துன்பங்களும் நீங்கப் பெற்று நல்ல நிவாரணம் கிடைத்திடும் என பதிலளித்தார்.

இவ்வாறு
الفقر والتواضع والتوبة والتقوى والرضا والحياء والمحبة والشكر والرجاء والحمد

ஆகியவற்றைக் கடைபிடித்து அமல் செய்வதின் மூலம் பாவமென்ற நோய் நீங்கப் பெற்று சுகம் கிடைத்திடும் என்பதில் ஐயமில்லை
ஒரு நாள் பிரபல மருத்ததுவர்
ஒருவரிடம் ஒரு நோயாளி வந்தார். "டாக்டர் என்னை சோதித்து பாருங்கள்" என்றார். "ஏன் உங்களுக்கு என்ன செய்கிறது" என்றார் டாக்டர். அவ்வளவுதான் தமக்கிருப்பதாக தாமே நினைத்து கொண்ட ஆயிரம் நோய்களை அழாக்குரையாக கூறி முடித்தார். "அப்படியா" என்று கேட்டு கொண்டே வந்த டாக்டர் எல்லா சோதனைகளையும் செய்து முடித்தார்.

"எனக்கு என்ன வியாதி என்பதை கண்டுபிடித்தீர்களா" என்று பதட்டத்தோடு கேட்டார் நோயாளி.

"உங்களுக்கு எந்த நோயும் இல்லை. நீங்கள்தான் கண்டதை நினைத்து கவலைப்பட்டு கொண்டிருக்கிறீர்கள்."

"என்ன டாக்டர் சொல்கிறீர்கள்?"

"ஆமாம் இப்போது உங்களுக்கு தேவை மருத்துவமல்ல. மன மகிழ்ச்சி. நான் சொல்வது போல் செய்யுங்கள். இன்று நம்மூரில் நடக்கும் சர்கசுக்கு செல்லுங்கள். அங்கே கிரிபால்டி என்னும் கோமாளி வருவான். அவன் ஏராளமான வேடிக்கைகள் செய்வான். நிச்சயமாக அவன் தன் வேடிக்கைகளால் உங்களை சிரித்து பிரள வைத்து விடுவான். நான் சொல்கிறேன். நம்புங்கள். உலகில் உள்ள எல்லா மருந்துகளை விடவும் இப்போது உங்களுக்கு நன்மை பயக்க கூடியது இதுதான்"

மருத்துவரை பரிதாபத்தோடு பார்த்தார் நோயாளி. "டாக்டர் அந்த கிரிபால்டியே நான்தான்" என்றார் அழாக்குரையாக.
ஒரு நாள் செய்யதுனா ஈசா (அலைஹிஸலாம்) பிரயாணம் செய்து கொண்டு இருந்தனர். அப்போது வழியில் வாடிய வதனத்துடன் சிலர் இறைவனை வணங்கி கொண்டு இருந்தனர். "நீங்கள் யார்? உங்களின் இந்த நிலைக்கு என்ன காரணம்" என்று வினவினர் செய்யதுனா ஈசா (அலைஹிஸலாம்) அவர்கள்.

அதற்கு அவர்கள், "நரக நெருப்புக்கு நாங்கள் அஞ்சுகிறோம். அதனால்தான் உடலை வருத்தி இறைவனை வணங்கி கொண்டு உள்ளோம்" என்றனர்.
அதற்கு செய்யதுனா ஈசா (அலைஹிஸலாம்) அவர்கள் "நரக நெருப்புக்கு அஞ்சியாவது வணக்கம் புரிகிறீர்களே. அல்லாஹ் உங்களை நரக நெருப்பில் இருந்து பாதுகாப்பானாக" என்று பிரார்த்தித்துவிட்டு அவ்விடம் விட்டு அகன்றனர்.

செல்லும் வழியில் இன்னும் சிலரை கண்டார்கள். அவர்களின் உடல் இளைத்து வெளுத்து காணப்பட்டனர். "நீங்கள் யார்? உங்களின் இந்த நிலைக்கு என்ன காரணம்" என்று வினவினர் செய்யதுனா ஈசா (அலைஹிஸலாம்) அவர்கள்.

அதற்கு அவர்கள், "நாங்கள் சுவர்க்கத்தை ஆசை வைக்கிறோம். சுவனம் செல்ல வேண்டும் என்ற ஆவலினால் உடலை வருத்தி இறைவனை வணங்கி கொண்டு உள்ளோம்" என்றனர்.
அதற்கு செய்யதுனா ஈசா (அலைஹிஸலாம்) அவர்கள், "வருந்தாதீர்கள், உங்களுக்கு சுவனம் கிடைக்க வேண்டுமாயின் இந்த வணக்கத்தினால்தான் கிடைக்க வேண்டும் என்றில்லை. ஆனாலும் அல்லாஹ் உங்களின் விருப்பத்தை நிறைவேற்றி வைக்க போதுமானவன்" என்று பிரார்த்தித்துவிட்டு அவ்விடம் விட்டு அகன்றனர்.

மீண்டும் நடையை தொடர்ந்தனர். அப்போது இன்னும் சிலரை கண்டனர். அவர்கள் நடைபிணங்களை போன்று காட்சியளித்தனர். "நீங்கள் யார்? உங்களின் இந்த நிலைக்கு என்ன காரணம்" என்று வினவினர் செய்யதுனா ஈசா (அலைஹிஸலாம்) அவர்கள்.

அதற்கு அவர்கள், "நாங்கள் நரகத்திற்கு அஞ்சவுமில்லை, சுவர்க்கத்தை விரும்பவும் இல்லை, அல்லாஹ்வின் நாட்டப்படி எது கிடைத்தாலும் அதனை ஏற்றுகொள்கிறோம். ஆனால் அல்லாஹ்வின் அன்பு எங்களின் உள்ளத்தில் ஆட்சி செய்கிறது. அதுவே எங்களை இவ்வாறு மாற்றியமைத்துவிட்டது" என்றனர்.

அதனை கேட்ட செய்யதுனா ஈசா (அலைஹிஸலாம்) அவர்கள் மிக்க மகிழ்ந்தார்கள். "நீங்கள்தான் தன்னல நோக்கமின்றி தவம் செய்யும் தூயவர்கள். நீங்கள்தாம் இறையண்மையை எய்தப்பெற்றவர்கள்" என்று மூன்று முறை கூறிவிட்டு அவ்விடம் விட்டு அகன்றனர்.

ஒரு நாள் செய்யதுனா ஈசா (அலைஹிஸலாம்) அவர்கள் வெட்ட வெளியில் கடும் மழையில் அகப்பட்டு கொண்டனர். ஒதுங்குவதற்கு இடம் தேடியபோது அங்கு ஒரு குடில் தென்பட்டது. அதை நோக்கி சென்றனர். அதில் ஒரு பெண் இருந்தாள். அதில் அவர்கள் நுழையாது வேறிடம் தேடி சென்றனர். ஒரு குகையை கண்டு அதற்குள் எட்டி பார்த்தனர். அங்கு ஒரு சிங்கம் கர்ச்சித்து கொண்டு இருந்தது.

அப்போது செய்யதுனா ஈசா (அலைஹிஸலாம்) அவர்கள் அல்லாஹ்வை நோக்கி, "யா அல்லாஹ்! உன்னுடைய படைப்புக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வோர் இடத்தில் ஒதுங்கி கொண்டு உள்ளன. அவற்றிற்கு நீயே இடங்களை ஒதுக்கி கொடுத்து உள்ளாய். எனினும் எனக்குத்தான் ஒதுங்க ஓர் இடமும் இல்லை" என்று கூறினர்.

அதற்கு அல்லாஹ், "ஈசா! ஒதுங்குவதற்கு உமக்கா இடமில்லை? என்னுடைய ஆழமான அன்பு உமக்கு என்றென்றும் உண்டு. என்னுடைய அன்பு நிழலில்தான் நீர் எப்போதும் ஒதுங்கி நிற்க வேண்டும். இம்மை உமக்கு வேண்டாம். இம்மையின் ஆயுளை விட மறுமையின் ஆயுள் மிக பெரியது. இம்மையில் ஒரு மனிதனின் முழு ஆயுளை மறுமையில் ஒரு தினத்துக்கு ஒப்பிடலாம்" என்று பதிலிறுத்தான். அப்பொழுது அவர்களின் கண்முன் அழகிய மாளிகை ஒன்று காட்சியளித்தது. அல்லாஹ் மீண்டும் அவர்களை நோக்கி "ஈசா! இம்மாளிகை வேண்டுமாயின் உமக்கு கிடைக்கும். ஆனால் நாம் உமக்கு தந்துள்ள நபித்துவமானது இதைவிட எத்துனை மடங்கு மாண்புடையது" என்று கூறினான்
ஒரு முறை ஒரு மனிதர் ஹழ்ரத் அபூ தர்தா ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வந்து, "தங்களின் வீடு நெருப்புப் பற்றிப் கொண்டது" என்று கூறினார்.

அது கேட்ட அவர்கள், "என் இல்லத்தில் நெருப்புப் பிடிக்காது" என்றனர். சிறிது நேரம் கழித்தபின், இன்னொரு மனிதர் வந்து அதையே கூற உடனே அவர்கள் முன்பு கூறிய பதிலையே கூறினார்கள். பின்னர் மூன்றாவர் வந்து, "நெருப்பு பிடித்துக்கொண்டே வந்து, தங்கள் வீட்டினருகில் அணைந்து விட்டது, தங்கள் வீடு பற்றவில்லை" என்று கூறினார். அது கேட்ட அவர்கள், "அல்லாஹ் என் வீட்டை எரிக்க மாட்டான் எனும் நம்பிக்கை எனக்கு முழுமையாக இருந்தது." என்றார்கள்.

அதற்கு காரணம் என்ன என வினவிய பொழுது, "அண்ணல் நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் எனக்கு ஒரு துஆவைக் கற்றுக்கொடுத்து, ஒருவன் காலையில் எழுந்தவுடன், இதனை ஓதி வந்தால் மாலைவரை அவனை எத்துன்பமும் அணுகாது" என்று கூறினார்கள். நான் அதனை வழக்கமாக ஓதிவருகிறேன்." என்று கூறி அந்த துஆவை ஓதிக் காட்டினார்கள்.

அது வருமாறு:-

"அல்லாஹும்ம அன்த ரப்பீ
லாயிலாஹ இல்லா அன்த்த அலைய்க்க தவக்கல்த்து
வ அன்த்த ரப்புல் அர்ஷில் கரீம்.
மாஷா அல்லாஹுகான வமாலம்
யஷஹ லம்யகுன் வலா ஹவ்ல
வல குவ்வத்த இல்லா பில்லாஹில்
அலிய்யில் அளீம்.
அஹ்லமு அன்னல்லாஹ அலா குள்ளி ஷையின் கதிர்.
வ அண்ணல்லாஹ கத் அஹாத்த பிகுல்லி ஷைஇன் இல்மா.
அல்லாஹும்ம இன்னீ அவூதுபிக்க
மின்ஷர்ரி நப்ஸீ வமின் ஷர்ரி குல்லி
தாபத்தின் அன்த்த ஆகிதுன்
பி நாசியத்திஹா இன்ன ரப்பீ
அலா சிராத்திம் முஸ்தகீம்."
 
செய்யதுனா சுலைமான் (அலைஹிஸலாம்) அவர்களும் எறும்பும்

ஒரு நாள் செய்யதுனா சுலைமான் (அலைஹிஸலாம்) அவர்கள் படுத்திருக்கும்போது அவர்களின் உடம்பில் எறும்பு ஒன்று ஊர்ந்து திரிந்ததை கண்ட அவர்கள் அதனை பிடித்து வீசி எறிந்தார்கள். அப்போது அந்த எறும்பு அவர்களை நோக்கி, "நெறி நீதி மன்னனாகிய அல்லாஹ்க்கு நீரும் நானும் அடிமைகள்தான் என்பதை உணராது என்னை நீர் அகங்காரத்துடன் பிடித்து வீசி எறிந்தீர். உமக்கு வல்லமை உள்ளது என்று எண்ணி பெருமையுற்று வரும் துன்பம் பற்றி உணராது எனக்கு துன்பம் இளைத்தீர். இது பற்றி நான் மறுமையில் அல்லாஹ்வின் முன் வழக்காடுவேன்" என்றது.

அதுகேட்டு செய்யதுனா சுலைமான் (அலைஹிஸலாம்) அவர்கள் திடுக்குற்றவர்களாய் அவ்வெறும்பினை நோக்கி, "எறும்பே! நான் என்ன அவ்வளவு பெரிய தீங்கு செய்து விட்டேன்? என பரிவோடு கேட்டார்கள். அதற்கு அந்த எறும்பு அவர்களை நோக்கி, "என்னுடைய உடலோ மென்மையானது. அதனினும் மேன்மையானது அதன் மேல் போர்த்தப்பட்டுள்ள தோல். அப்படி இருக்க நீர் என்னை வெளியே தூக்கி எறிந்தீர். இதை விட பெரும் தீங்கு வேறொன்று இருக்கிறதா? வலியவர் எளியவர்களை மதித்திடாது, அவர்களுக்கு தீங்கு இழைப்பது பண்பு என்றால் கடலானது அலைஎரிந்து அவனி முழுவதையும் அழித்திடாமல் இருக்க காரணம்தான் என்ன? அதனுடைய இயலாத்தன்மைதானா? நீங்களோ அவனி புரக்க வந்த அரசர் மட்டுமல்ல மக்களை நேர வழி நடத்த வந்த நபியும் ஆவீர்கள். நீங்களே இவ்வாறு செய்தால் மற்றவர்களை பற்றி என்ன சொல்வது? என்று இடித்துரைத்தது.

எறும்பின் இந்த இடிமொழி செய்யதுனா சுலைமான் (அலைஹிஸலாம்) அவர்களை ஒரு குலுக்கு குலுக்கியது. அவர்கள் எறும்பை நோக்கி, "எறும்பே! நான் வேண்டுமென்றே உனக்கு துன்பம் இழைக்கவில்லை. நீ என் மீது ஊர்ந்து செல்வதை உணர்ந்து நான் அறியாமலேயே உன்னை பிடித்து வீசி எரிந்து விட்டேன். எனினும் பிழை பிழைதான். அதிலிருந்து தப்ப முடியாது. எனினும் என் பிழையை பொறுத்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறினார்கள்.

அப்போது அவ்வெறும்பு "நீர் எனக்கு மூன்று வாக்குறுதிகளை அளிப்பின் நான் உம் பிழையை பொறுப்பேன். இல்லையென்றால் பிழை பொறுக்க மாட்டேன்" என்று கூறியது.
செய்யதுனா சுலைமான் (அலைஹிஸலாம்) அவர்களும் "அவ்விதமே அவற்றை அளிக்கிறேன்" என்று கூறினார்கள். அப்போது அவ்வெறும்பு "தாவூதின் மகனாரே! நீர் உலக ஆசாபாசங்களில் உழலாதீர். அதிகமாக சிரிக்காதீர். உம்மிடம் ஒருவர் உதவி தேடிவரின் அவரை வெறுமனே திருப்பி அனுப்பாதீர்" என்று கூறியது. "வாக்குறுதி காக்கிறேன்" என்றார்கள் செய்யதுனா சுலைமான் (அலைஹிஸலாம்) அவர்கள். அது கேட்டு அகமகிழ்ந்து அவ்வெறும்பு நான் உம் பிழை பொறுத்தேன்" என்று கூறி அவ்விடத்தை விட்டு அகன்றது.




செய்யதுனா ஈசா நபியும் வாகனமும்

ஒருநாள் செய்யதுனா ஈசா (அலைஹிஸலாம்) அவர்களிடம் அவர்களின் சீடர்களில் ஒருவர் "எப்போது பார்த்தாலும் நடந்து கொண்டே இருக்கிறீர்களே, வாகனத்தில் ஏறி சென்றால் நலமாக இருக்குமே" என்று கூறினார்.

அதற்கு செய்யதுனா ஈசா (அலைஹிஸலாம்) அவர்கள் "என்னிடம் வாகனம் வாங்க பணம் இல்லையே" என்று கூறினர். அது கேட்ட அவர் உடனே ஒரு கழுதையை வாங்கி அவர்களுக்கு அன்பளிப்பு செய்தார். அதிலே ஏறி அவர்கள் இவர்ந்து சென்றனர்.

இரவானதும் அதற்கு தீனி போடுவது பற்றிய கவலை அவர்களுக்கு ஏற்பட்டது. உடனே அக்கழுதையை தந்தவரிடமே திருப்பி கொடுத்து, "என்னுடைய கவனத்தை அல்லாஹ்வை விட்டும் திருப்பக்கூடிய எதுவும் எனக்கு தேவை இல்லை" என்று கூறிவிட்டனர்.
செய்யதுனா யஹ்யா (அலைஹிஸலாம்) அவர்கள் கண்ட இப்லீஸ்                                 

ஒரு நாள் செய்யதுனா யஹ்யா (அலைஹிஸலாம்) அவர்கள் அல்லாஹ்வை நோக்கி "யா அல்லாஹ்! நான் இப்லீசை அவனது உண்மையான உருவத்தில் காண ஆசைபடுகிறேன். அவனை என்னிடம் அனுப்பி வை. அவனிடம் ஒன்றையும் மறைக்காது உள்ளதை உள்ளப்படி கேட்க விரும்புகிறேன்" என்று இறைஞ்சினார்கள்.

அப்போது அல்லாஹ் இப்லீசை அவர்களிடம் செல்லுமாறு ஏவினான். அவன் அவ்வாறே அவர்களிடம் வந்து, நான்தான் இப்லீஸ் என்றும் தான் விண்ணில் இருந்து விரட்டப்பட்ட சமயம் இருந்த உருவில்தான் இப்போது வந்திருப்பதாகவும் சொன்னான். அப்போது செய்யதுனா யஹ்யா (அலைஹிஸலாம்) அவர்கள் அவனை ஏறிட்டு பார்த்தனர். அவனுடைய தலையின் மீது கொக்கிகள் இருந்தன. அவனின் இடுப்பின் இருபுறமும் இரு குடங்கள் கட்டப்பட்டு இருந்தன. காலிலே அவன் சலங்கைகள் அணிந்து இருந்தான். அப்போது அவர்களுக்கும் அவனுக்கும் பின்வரும் உரையாடல் இடம்பெற்றது.


செய்யதுனா யஹ்யா (அலைஹிஸலாம்):
இப்லீசே! உன் தலை மீது இருப்பதென்ன?

இப்லீஸ்:


அதுதான் மனிதர்களின் அறிவை உறிஞ்சும் ஆயுதம்

செய்யதுனா யஹ்யா (அலைஹிஸலாம்):


உன் இடுப்பின் இரு புறமும் ஏன் குடங்களை கட்டி தொங்க விட்டிருக்கிறாய்?

இப்லீஸ்:

மனிதர்கள் இறக்கும் தருவாயில் அதில் சுவனத்து நீர் உள்ளது என்று கூறுவேன். அதனை அவர்கள் உண்மை என நம்பி குடிப்பார்கள். அதன் காரணமாக அவர்களின் உள்ளத்திலிருந்து இறை நம்பிக்கை நீங்கி விடும்.

செய்யதுனா யஹ்யா (அலைஹிஸலாம்):
உன்னுடைய கால்களில் இருப்பவை என்ன?

இப்லீஸ்:
சலங்கைகள், அவற்றின் கிண்கிணி ஒலி கேட்டு அதற்கேற்றாட்போல அவர்கள் பாட்டிசைப்பார்கள்.

செய்யதுனா யஹ்யா (அலைஹிஸலாம்):
எப்பொழுது நீ மனிதர்களை வழி கெடுக்கிறாய்?

இப்லீஸ்:
அவர்கள் வயிறு நிரம்பி இருக்கும் நேரத்தில்.

செய்யதுனா யஹ்யா (அலைஹிஸலாம்):
எப்போதாயினும் என்னை வழி கெடுக்க முனைந்ததுண்டா?

இப்லீஸ்:
ஆம், ஓர் இரவு நீர் அதிகமாக உண்டுவிட்டீர். அப்போது நீர் வணக்கத்தில் ஈடுப்படா வண்ணம் உமக்கு அலுப்பை உண்டு பண்ணினேன்.

செய்யதுனா யஹ்யா (அலைஹிஸலாம்):
அப்படியா? அப்படியென்றால் அல்லாஹ்வின் மீது சத்தியமாக, இனிமேல் நான் அதிகம் சாப்பிட மாட்டேன்.

இப்லீஸ்:

நான் இனிமேல் ஒருபோதும் மனிதருக்கு அறிவுரை வழங்க மாட்டேன்.

  •  இன்ஷா அல்லாஹ்வின் மகிமை

ஒரு நாள் செய்யதுனா தாவூத் (அலைஹிஸலாம்) அவர்களிடம் அவர்களின் மனைவி "இன்று கவசம் விற்று வரும் பணத்தை என்னிடம் தாருங்கள்" என்று கூறினர்.


"சரி தருகிறேன்" என்றார்கள் செய்யதுனா தாவூத் (அலைஹிஸலாம்)

ஆனால் அன்று கடைத்தெருவுக்கு கவசத்தை எடுத்து சென்றபோது அவற்றை வாங்க யாருமே வரவில்லை.

கணவர் கவசத்தோடு திரும்பி வருவதை கண்ட மனைவிக்கு ஏற்பட்ட ஏமாற்றத்திற்கு அளவே இல்லை.

"இன்றில்லாவிட்டால் என்ன. நாளை விற்று விடுகிறது" என்று மனைவிக்கு ஆறுதல் கூறினர் செய்யதுனா தாவூத் (அலைஹிஸலாம்)

அடுத்த நாளும் விற்கவில்லை. அதற்கடுத்த நாட்களும் அதே நிலைதான்.

இதை கண்ட செய்யதுனா தாவூத் (அலைஹிஸலாம்) அவர்களுக்கு பெரும் ஏமாற்றமும் வியப்பும் ஏற்பட்டது.

அவர்கள் அல்லாஹ்வை நோக்கி, "யா அல்லாஹ்! இதுவென்ன பெரிய சோதனையாக இருக்கிறது. நான் என்ன தவறு செய்தேன்" என்று ஏக்கத்தோடு கேட்டார்கள்.

அதற்கு அல்லாஹ், "நீங்கள் உங்கள் திறைமையை பெரிதாக எண்ணி எனது ஆற்றலை மறந்து "இன்ஷா அல்லாஹ்" என்று கூறாது உங்கள் மனைவியிடம் பதில் சொன்னீர்களே. எனவேதான் அது விற்கவில்லை" என்று பதில் கூறினான்.

செய்யதுனா தாவூத் (அலைஹிஸலாம்) அவர்கள் அதற்காக அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்டார்கள். அல்லாஹ்வும் மன்னித்து பின்னர் அவர்களின் தொழிலில் அபிவிருத்தி செய்தான்.
கனவு பற்றி நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள்:
"அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலியல்லாஹு அன்ஹு)அபூகத்தாதா அல் அன்சாரி (ரலியல்லாஹு அன்ஹு)
நூல் : ஸஹீஹுல் புஹாரி (பாகம் – 7 அத்தியாயம் – 91 ஹதீஸ் எண் - 6984)



"அல்லாஹ்வின் தூதர் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் நற்செய்தி கூறுகின்றவை (முபஷ்ஷிராத்) தவிர நபித்துவத்தில் வேறெதுவும் எஞ்சியிருக்கவில்லை என்று கூற நான் கேட்டேன். அப்போது மக்கள் நற்செய்தி கூறுகின்றவை (முபஷ்ஷிராத்) என்றால் என்ன என்று வினவினர்.
நபி சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் நல்ல (உண்மையான) கனவு என்று விடையளித்தார்கள்"

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)
நூல் : ஸஹீஹுல் புஹாரி (பாகம் – 7 அத்தியாயம் – 91 ஹதீஸ் எண் - 6990)


கனவு கண்டால் நடந்து கொள்ள வேண்டிய ஒழுக்கங்கள்:

நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் கூறினார்கள்:

"உங்களில் ஒருவர் தமக்கு விருப்பமான கனவொன்றைக் கண்டால் அது அல்லாஹ்விடமிருந்தே வந்தது (என்று தெரிந்து) அதற்காக அவர் அல்லாஹ்வைப் போற்றட்டும். அதை (தமக்க விருப்பமானவர்களிடம் மட்டும்) தெரிவிக்கட்டும். அதற்கு மாறாக தமக்கு விருப்பமில்லாத கனவு கண்டால் அது ஷைத்தானிடமிருந்தே வந்தது (என அறிந்து) அதன் தீங்கிலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரட்டும். ஏனெனில் அப்போது அக்கனவு அவருக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்திட முடியாது. இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்"

அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலியல்லாஹு அன்ஹு)
நூல் - சஹிஹல் புகாரி - பாகம் – 7 அத்தியாயம் – 91 ஹதீஸ் எண் - 6985


நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் கூறினார்கள்:

"நல்ல (உண்மையான) கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும் கெட்ட (பொய்) கனவுகள் ஷைத்தானிடமிருந்து வருவதாகும். எனவே ஒருவர் கெட்ட கனவு கண்டால் அதன் தீங்கிலிருந்து (அல்லாஹ்விடம்) அவர் பாதுகாப்புக் கோரட்டும். தமது இடப் பக்கத்தில் துப்பட்டும். ஏனெனில் அப்போது அவருக்கு அது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்திட முடியாதுநூல் - சஹிஹல் புகாரி - பாகம் – 7 அத்தியாயம் – 91 ஹதீஸ் எண் - 6986




அக்கினி (நெருப்பு).

செல்வமுள்ள மனைவி வாய்ப்பாள், சமூகத்தில் நல்ல மேன்மையான கௌரவம் உண்டாகும்.

அக்கினியைக் கையால் எடுத்தல்.

நாளுக்கு நாள் செல்வம் பெருகி அளவிலாச் செல்வந்தனாவாய். வீண் செலவுகள் ஏதும் ஏற்படமாட்டா.

அக்கினி மூட்டிச் சமைத்தல்.

எதிர்பாரா விதத்தில் அதிக நன்மைகள் உண்டாகும். வீண் விரயங்கள் ஏற்படமாட்டா.

அக்கினி ஜுவாலை.

வாழ்க்கையில் பலவித கஷ்டங்களும், சங்கடங்களும் நேரிவிடும்.

அக்கினியால் தனது உடை எறிதல்.

கண்பார்வை நாளுக்கு நாள் மங்கி வரும், கவலைகள் அதிகரித்து மன அமைதி குலையும்.

அக்ரோட்டைக் காணுதல்.

வியாபாரிகளாயின், வியாபாரத்தில் லாபம் அதிகம் கிடைக்கும். உத்தியோகஸ்தராயின், சம்பள விகிதம் பெருகும், செல்வம் உண்டாகும்.

அகாலத்தில் அதான் (பாங்கு).

அக்கிரம அநியாய குனங்களேற்படும். மக்களுக்கு துன்பங்கள் ஏற்படும். அல்லாஹ்வின் பக்தர்களைக் காணுதல்.
இது தலைமைத் தன்மையின் அடையாளமாம், ஏதேனுமொரு சமூகத்திற்கோ, சங்கத்திற்கோ, மன்றத்திற்கோ, கூட்டத்திற்கோ தலைவராவீர்கள்.

அத்திப்பழம் சாப்பிடல்.
எதிர்பாரா வகையில் நல்ல பொருள் கிடைக்கும். பிரயோசனம் அதிகம் உண்டாகும். அத்தி இலை.
அச்சம் வியாதி முதலியவை ஏற்படுவதற்கான அடையாளம் இது.

அதிக விரல்களைக் காணுதல்.

உங்கள் நோக்கம் பயன்படாமல் விலகிப்போகும். எனினும் உங்களைப் பிடித்துள்ள கவலையும் குழப்பமும் நீங்கும்.

அரசரைக் காணுதல்.

உங்களிடமுள்ள செல்வம் மென்மேலும் பொழிக்கும். கௌரவம் உண்டாவதுடன், அதிகாரப் பதவி ஏதேனும் கிட்டும்.

அரசர் முகம் காணுதல்.

உங்களுடைய அந்தஸ்தும், கௌரவமும் உயரும், அதிகாரம் கிடைக்கும்.

அரசரைச் சந்தித்தல்.

அரசாங்கத்தால் உதவியும், பயனும் பெறுவீர்கள். அரசர் சிரிக்கக் கண்டால்.
கௌரவமும், மரியாதையும் ஏற்படும் சந்தோஷம் பெருகும்.

அரசர் தகாத இடத்தில் இறங்குதல்.

பிரஸ்தாப இடத்தில் திடீரென அபாயங்கள் நேரிடும், அங்குள்ள விவசாயம் நாசமாகும். அரசருடன் உணவருந்துதல்.
வயது அதிகமாகும், ஆயுள் வளரும், தேக ஆரோக்கியம் பெருகும், வியாபாரத்திலும், தொழிலிலும் முன்னேற்றம் கிடைக்கும்.

அரசர் கோபமாயிருக்கக் காணுதல்.

எதிர்பாரா நஷ்டங்கள் பல ஏற்படும். அச்சத்தால் மனக்கலக்கம் உண்டாகும்.

அரசருடன் தன்னைக் காணுதல்.

உங்கள் உறவினர்களிடமிருந்தோ அல்லது உங்களை ஆதரிப்பவர்களிடமிருந்தோ பிரிய நேரிடும்.

அடிமையை விற்கக் காணுதல்.

இது துக்கத்தின் அறிகுறியாகும். இரவும், பகலும் மனக்குழப்பம்
இருக்கும். அரசனுடன் சண்டை.
அதிகமான சுகம் குறையும்.

அழகிய கிழவி.

வசிக்கும் வீடு அழகாகும், உணவு அதிகம் கிடைக்கும். அப்சர ஸ்திரீ.
அந்தஸ்து உயரும், கல்வி வளர்ச்சியடையும், நீங்கள் கவலையுள்ளவராகவோ, வியாதியஸ்தராகவோ இருந்தால், அவை நீங்கி சந்தோஷமும், சுகமும் உண்டாகும்.

அணியும் வஸ்திரம்.

துக்கமும், வறுமையும் ஏற்படுவதுடன் மனக் குழப்பமும் உண்டாகும்.

அதிமதுரபான பாத்திரம்.

உங்களுக்கு உண்மையுரைக்கும் பெண்ணோ அல்லது உண்மையான வேலைக்காரனோ கிடைப்பார்கள். அடுப்பு.
ஒரு பெண்ணால் உங்களுக்கு நல்ல பிரயோசன முன்டாகும்.

அம்பு எய்தல்.

உங்கள் நோக்கம் நிறைவேறும், சந்தோஷமும் கிடைக்கும்.

அம்பினால் போர் செய்தல்.

உங்கள் ஆயுள் பெருகும், எதிரிகள் மீது வெற்றி பெறுவீர்கள்.

அல்லாஹ்வின் ஒளியைக் காணுதல்

முஃமினாக இருப்பின் உங்களுக்குச் சந்தொஷமுண்டாகும். நீங்கள் முஸ்லிமாக இருந்தால் கௌரவம் பெருவீர்கள். அறிஞராக இருந்தால் தூய்மையடைவீர்கள்.

அல்லாஹ் கணக்கு கேட்பதைக் காணுதல்

நீங்கள் இல்லத்தில் வசிப்பவராயின், சந்தோஷமும், ஆனந்தமும் உண்டாகும். பிரயானத்திலிருந்தால், உங்கள் பிரயாணம் கஷ்டமின்றி முடிவடைந்து சுகமே இல்லந்திரும்புவீர்.

அட்டையைக் காணுதல்

சமூகத்தில் கேவலமானவனாகவும், இழிவானவனாகவும் கருதப்படுவீர்கள். உங்களுடைய சொல்லுக்கு மதிப்பே இராது.

அரிசி

நீங்கள் பல சங்கடங்களையும் பட்டபின் செல்வத்தையும் அடைவீர்கள்.
அம்மியைக் காணுதல்

சமுதாய மக்களிடையே தனிச் சிறப்புடைய இடம் கிடைக்கும்.
அம்மியில் தண்ணீர் ஓடுதல்

உங்களுடைய ஆயுளின் முடிவு கால அறிகுறி இது. வெகு சீக்கிரத்தில் நீங்கள் இவ்வுலகிலிருந்தே மறைந்து விடுவீர்கள்.

அறிமுகமில்லா வீடு

வியாதிகள் பல ஏற்பட்டு வருந்துவீர்கள். அல்லாஹ்விடம் பாவத்தினின்றும் பாதுகாப்புத் தேடிக்கொள்ள வேண்டும்.

அத்திமரம்

உங்கள் செல்வம் பெருகும், பெருந்தனவந்தராவீர்கள், நீங்கள் வர்த்தகராயிருந்தால் உங்கள் வியாபாரம் பெருகிக்கொண்டே போகும்.

அகன்ற கதவைக் காணுதல்

உங்களுக்கு அதிகமான உணவு கிடைப்பதற்கான அறிகுறியாகும் இது.

அடைக்கப்பட்ட கதவைக் காணுதல்

வறுமையும், கஷ்டமும் ஏற்படுவதற்கான அறிகுறி.

அழுகையைக் காணுதல்

எதிர்ப்பார்க்கும் சுகத்துக்குப் பதில் துக்கமே உண்டாகும். எனினும் இவ்வுலகிலும், மறுவுலகிலும் நன்மைகளே கிட்டும். உங்களுக்கும் நேரவிருக்கும் தீச்செயல்களிலிருந்து தப்பிவிடுவீர்கள். அல்லாஹ்வை வழிப்படுங்கள். உங்களுக்கு அவன் துணையிருப்பான்.

அதிகம் பேசுவதைக் காணுதல்

எதிர்பாராத வகையில் உங்களுக்கு அபாயங்கள் நேரிடும்.

அதிக நட்சத்திரங்களை காணுதல்

அரசாங்கத்தில் ஊதியமோ அல்லது உதவியோ பெறுவீர்கள். கௌரவமும், மரியாதையும் கிட்டும், உங்கள் செல்வமும் பெருகும்.

அழகிய கட்டிலைக் காணுதல்

உங்களுக்கு ஒரு பெண் கிடைப்பாள். ஆனால், அவள் நயவஞ்சகியாகவோ அல்லது நல்ல அழகும், செல்வமும் உள்ளவளாகவோ இருப்பாள். திடீரென அவ்வப்போது உங்களுக்கு திடுக்கம் ஏற்படும்.

அஞ்சனம் (சுர்மா)

உங்கள் அறிவு விசாலமடையும், பார்வையும் கூர்மையாகும், செல்வம் கிடைக்கும், திருமணமாகியவராகயிருந்தால் உங்களுக்கு ஆண் சந்ததி தோன்றும்.

அஞ்சனக் கூடு

அழகிய மனைவி ஒருத்தி உங்களுக்கு கிடைப்பாள்.
அஞ்சனமிடக் காணுதல்

மார்க்கப் பணியில் ஆர்வம் தோன்றி அதில் ஈடுபடுவீர். சமூகத்திலும், மக்களிடையேயும் உங்களுக்கு சிறப்பும், கௌரவமும் ஏற்படும்.

அஞ்சனக்குச்சி

உங்களுக்கொரு மகன் பிறப்பான், உங்கள் சந்தோஷம் பெருகும்.

அம்மிக் குழவி

நாவன்மை உண்டாகி, பேச்சில் வல்லவராவீர்கள். வாயிலிருந்து வரும் வார்த்தைகள் திருத்தமடைந்து குணம் ஏற்படும்.

அறிமுகமில்லாப் பெண்ணின் மடியிலிருத்தல்

உங்களது நோக்கம் நிறைவேறும், செல்வம் பெருகி வளமான நல்வாழ்வு கிட்டும்.

அறிமுகமில்லாப் பெண்ணுடன் புணர்தல்

நீங்கள் கண்ட இக்கனவின் பயனாக சந்தோஷம் பெற்றிருந்தால் உங்களுக்கு நற்பயன் கிட்டும்.

அறிமுகமுள்ள பெண்ணுடன் புணர்தல்

இத்தகைய கனவைக் கண்டவர்கள் பிரயோசனமடைவார்கள்.

அத்தர் வியாபாரியைக் காணுதல்

உங்களுக்கு அரசாங்கத்தில் ஓர் உத்தியோகமோ, அல்லது சன்மானமோ அல்லது உதவியோ கிடைக்கும். இவையேதும் கிடைக்காவிட்டால் உங்கள் பெயர் பிரபலமடைந்து புகழ் பெறுவீர்.

அத்தர் தடவ கண்டால்

மார்க்க சம்பந்தமான அம்சங்களால் உங்களுக்கு ஆனந்தம் ஏற்படும். வாழ்வில் சுபிட்சம் அடைவீர்.

அகீக் (கல்)

உங்கள் கௌரவமும், அந்தஸ்தும் சமுதாயத்தில் உயர்வடையும். உள்ளத்திலும் தாராளத் தன்மையும் ஏற்படும்.

அசா (தண்டம்)

ஓர் கூட்டத்திற்கோ, மன்றத்திற்கோ, சமூகத்திற்கோ தலைவனாவீர்கள்.

அடிமையைக் காணுதல்

எவருடைய ஆதிக்கமோ, கட்டுப்பாடோ இல்லாமல் சுதந்திரமாக வாழ்க்கை நடத்துவீர்கள்.
அடுப்புக் கரி

நீங்கள் சர்வ எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும். எதிர்பாராத வகையில் அச்சமும், பகையும் உங்களுக்கேற்படும். கடுமையான வியாதி உண்டாகும். கஷ்டங்களும், ஆபத்துகளும் வரும்.

அகண்ட இல்லம்

உலகத்தில் செல்வப்பெருக்க மேற்படும்.
அயலாரின் குமாரன்

வியாதியும், அநாவசியமான சச்சரவும் உங்களுக்கு ஏற்படும்.
அழகிய குமரி

சந்தோஷமும், செல்வமும் எதிர்பாராமல் உங்களை வந்தடையும்.

அந்நிய ஆடவன் தன் படுக்கையில்

ஆயுட்காலம் நீளமாகும் என்பதன் அறிகுறி இது.
அந்நியன் படுக்கையில் தன்னைக் காணுதல்

விரோதி உண்டாவான், அதனால் பலவித சங்கடங்களுக்காளாவீர்.
அதிகமான ரொட்டிகள்

ஆயுள் பெருகும் புதிய நல்ல நண்பர்களின் கூட்டுறவு ஏற்படும்.

அசூயைப் பொருள்

ஏதோவொரு அசுத்தமான பொருள் உங்களுக்குக் கிடைப்பதற்கான அறிகுறியாகும் இது.

அதிகாலைக் காற்று

வெகு சீக்கிரத்திலேயே விவாகம் நடைபெறும், சந்தோஷமும் பெருகும்.

அதிகம் சிரித்தல்

எந்த வகையிலேனும் துக்கமும் வருத்தமும் ஏற்படுவதற்கான அறிகுறி இது.

அகன்ற மார்ப்பைக் காணுதல்

வீரச் செயல்களில் பெரும் புகழும், கீர்த்தியும் அடைவீர்கள்.

அல்லாஹ்வின் பிரகாசம்

முஃமினானவனுக்கு சந்தோஷம் உண்டாகும். முஸ்லிமுக்கு நன்மை ஏற்படும், ஆளிம்களுக்கு தூய்மை உண்டாகும். அதிகாரிகளுக்கு நேர்மையும், நட்பினமும் உண்டாகும். துறவிகளுக்கு ஒர்மையும். மனசீர்திருத்தமும் ஏற்படும். அடிமையாயிருந்தால் அவனுக்கு விடுதலையும், கைதியாயிருந்தால் விமோசனமும் வியாதியஸ்தனாயிருந்தால் தெய்வ சுகமும் ஏற்படும். காபிராயிருந்தால் அவன் முஸ்லிமாவான்.

அல்லாஹ் ஏதேனும் ஓரிடத்தில் இறங்கக் கண்டால்

எந்த இடத்தில் அல்லாஹ் இறங்கினான் என்பதைக் கண்ட இல்லத்தில் சிறப்பும், வெற்றியும், சேமமும் உண்டாகும்.

அல்லாஹ்வை ஏதேனும் ஓர் உருவத்தில் கண்டால்

கனவைக் கண்டவன் தன் துர்செய்கையிலிருந்து மன்னிப்பு கோர வேண்டும். இப்படிச் செய்தால் அவன் சுவர்க்கவாதியாகச் சமைவான்.

அன்பியாக்கள், நபிமார்களைக் கண்டால்

தலைமைத்தனத்தைப் பெறுவான், அல்லது பெரிய தனவந்தனாவான்.

அத்திப் பழத்தை உண்ணக் கண்டால்

நல்ல பொருள் கிடைக்கும். நிரந்தரமான செல்வமும் உண்டாகும்.

அக்கினியை தின்னக் கண்டால்

தகாத முதலைக் தின்பான். மேலும் அதிகமான மன வேதனையை அடைவான்.

அக்கினி தீண்டக் கண்டால்

பிரஸ்தாப இடத்தில் மரணம் அதிகம் ஏற்படும்.

அக்கினியை வணங்கக் கண்டால்

உலகப்பற்றும், மார்க்கப்பற்றும் பாழடையும், தகாத முதலை விரும்புவான்.

அக்கினி வானத்திலிருந்து இறங்குவதைக் கண்டால்

கஷ்ட காலம் ஏற்படும்.
அல்லாஹ்வை குறைபாடு உருவமாய்க் கண்டால்

இக்கணவைக் கண்டவன் உடனடியாகவும், துரித்தமாகவும் அல்லாஹுதஆலா விடம் பாவமன்னிப்பை கோர வேண்டும்.

அதான் (பாங்கு) சொல்வதாய் கண்டால்

இப்படிக் கண்டவன் கொடியவனாயிருந்தால் அவனுடைய கரம துண்டிக்கப்படும். நல்ல மனிதரயிருந்தால் இவருக்கு ஹஜ்ஜு கிடைக்கும்.

அக்கினி ஒரு வீட்டிலோ அல்லது நகரிலோ தீப்பிடித்து எரிவதைக் கண்டால்

பிரஸ்தாப இல்லத்திலும், நகரத்திலும் அக்கிரமும் அநியாயமும் ஏற்படும்.
அக்கினி பூஜையில் தன்னைக் கண்டால்

இவனுடைய இகபரம் சீர்படும். ஹராமான பொருளை விரும்புவான்.

அக்கினி வானத்தின் பக்கம் செல்வதைக் கண்டால்

இதைக் கண்டவன் அல்லாஹ்வின் மீது நம்பிக்கையற்றவனாகவும் அடாத மொழி கூருபவனாகவுமிருப்பான்.

அக்கினியில் மாமிசத்தையிட்டு உன்னுவதாக கண்டால்

இவன் மக்களுடன் புறம பேசாமல் தப்பித்திருக்க வேண்டும் இவன் உணவு நிறையும், இவனுக்கு துன்பமும், துயரமும் அதிகமுன்டாகும்.

அக்கினியால் வஸ்திரமோ, தன் உறுப்போ கரிந்து போவதைக் கண்டால்

இப்படிக் கண்டவனுக்கு துன்பம் ஏற்படும்.
அக்கினியால் சுடக் கண்டால்
யாரேனும் ஒருவன் கடுமையாய் ஏசுவான்.

அக்னி புகையின்றி ஆகாயத்திலிருந்து இறங்கக் கண்டால்

கண்டவனுக்குத் துன்பமானதெல்லாம் இலகுவாகும்.
அக்கினியைக் சுவைக்கக் கண்டால்

அநாதைகளின் பொருளை தின்னுவான்.
அக்னி வர்ஷ்க்க கண்டால்

இது யார் மீது விழுகின்றதோ அவர் கஷ்டத்துக்கும் வேதனைக்கும் ஆளாவார்.

அரசர் சன்மானமளிக்கக் கண்டால்

அருளும், செல்வமும், கௌரவமும் பெருகும்.

அரசர் (மரணமடைந்தவர்) உயிருடன் இருக்கக் கண்டால்

அவருடைய சட்டதிட்டங்களும் நடைமுறையும் பிரஸ்தாப தேசத்தில் திரும்பிவரும்.




ஆகாயத்தைக் காணுதல்

உங்கள் அந்தஸ்தும், மதிப்பும் உயரும், உங்களுக்கு ஆண்மகவு பிறக்கும்.
ஆகாயத்தில் நடத்தல்

சமுதாயத்தில் இழி நிலையும், கேவலமும் ஏற்படும். பாவத்தில் சிக்குண்டு உழல்வீர். அல்லாஹ்வின் மீது ஞாபகமாயிருந்து தொழுதால் கஷ்டங்கள் தணியும்.

ஆகாயத்தில் பறந்து அடைதல்

இருலோக வாழ்க்கைகளிலும் பெருமையடைவீர்கள். சந்தோஷமும், பொருளும் கிடைக்கும்.

ஆகாயத்தில் பறந்து செல்லுதல்

வெளியூர் செல்ல வேண்டிய பிரயாண வாய்ப்பு ஏற்படும். எதிர்பாராத வகையில் வெற்றி உங்களைத் தேடி வந்தடையும்.
ஆகாயத்தில் காற்று வீசக் காணுதல்

அச்சமும், துக்கமும் ஏற்படுவதற்கான அறிகுறி இது. எனினும், பல்வேறு வகையான காற்றுக்குப் பல்வேறு பலன்கள் உண்டு. ஆகாயத்தில் புழுதி கலந்த காற்றயிருந்தால், அத்துடன் அந்தப் புயல் காற்றின் காரணமாக விருட்சம் விழுவதைக் கண்டால் அபாயங்களுண்டாகும். மனக் கலக்கம் ஏற்படும். தரைமட்டத்திலேயே பூமியில் இக்காற்று வீசுவதாய்க் கண்டால் வெளியூர் பிரயாணம் செய்யும் வாய்ப்பும் ஏற்படும். நல்ல பிரயோசனமும் ஏற்படும். செல்வா நிலையும் தோன்றும், இதே காற்று வானத்தின் பக்கம் வீசுவதாய்க் கண்டால், அண்மையில் மரணம் ஏற்படுவதற்கான அறிகுறி இது.
ஆடு மேய்த்தல்

நீங்கள் வெகு சீக்கிரத்தில் குடும்பத் தலைவனாகி விடுவீர்கள்.

ஆட்டு இறைச்சியை உண்ணுதல்

உங்களிடமிருந்து எப்போதோ காணாமற்போய்விட்ட பொருள் மீண்டும் கிடைக்கும். எதிர்பாராத உணவு கிடைக்கப்பெறுவீர்கள்.
ஆட்டு குட்டி

சந்தோஷம் ஏற்படுவதற்கான அறிகுறி இது.

ஆந்தையைக் காணுதல்

சமுதாயத்திலும், இனமக்களிடையேயும் அந்தஸ்து உயரும், கௌரவமும் ஏற்படும்.

ஆப்பிள் பழத்தைக் காணுதல்

சந்தோஷமும், நன்மைகள் நிரந்த சுக வாழ்க்கையும் உண்டாகும். அறிவுள்ள மகன் பிறப்பான்.

ஆலிமைக் காணுதல்

நீங்கள் நடத்தையிலும், பேச்சிலும் நல்ல பெயர் எடுப்பீர்கள். கௌரவமான வாழ்க்கை கிட்டும்.





இருளைக் காணுதல்

உங்கள் மனதில் தடுமாற்றம் ஏற்படும், உலக வேளைகளில் கவனம் இராது.
இடது கரத்தைக் காணுதல்

உங்கள் மனைவி அல்லது சகோதரியின் சந்திப்பு அகஸ் மாத்தாக ஏற்படும்.
இல்லத்தில் நுழைதல்

உங்கள் விரோதியை நீங்கள் வெல்வீர்கள். பகைமை அச்சம் அறவே ஒழிந்துவிடும்.

இல்லம் தீக்கிரையாதல்

அரசாங்கத் துறையிலிருந்தோ அரசாங்க அதிகாரிகளிடமிருந்தோ எதிர்பாரா வகையில் உங்களுக்கு பொருள் கிட்டும்.

இரு கரங்களிலும் மருதோன்றி

(நீங்கள் ஆணாயிருந்தால்) உங்களுடைய ஜீவியத்துக்காக மிகவும் சங்கடமடைவீர்கள். (பெண்ணாயிருந்தால்) உங்களுக்குச் சந்தோஷ மேற்படும்.




ஈயைக் காணுதல்

கீழ்தரத்தின் அறிகுறி இது நீங்கள் சமுதாயத்தில் மட்டரகமாகக் கருதப்படுவீர்கள்.

ஈரல்

நல்ல நிலையில், பெரும் அந்தஸ்தும், புத்திசாலியுமான பெண் உங்களுக்கு கிடைப்பாள்.

ஈட்டி

பிரயாணம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படும். அல்லது எதிர்பாரா செல்வம் கிடைக்கும். மக்கள் உங்களுக்கு வழிபட்டு, உங்கள் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடப்பார்.





உப்பு காணுதல்

நன்மைகளும் நல்ல பிரயோசனங்களும் உண்டாகும். நீங்கள் வியாதியுற்றவராய் இருந்தால் வியாதிகள் நீங்கி சுகம் பெறுவீர்கள்.

உடைந்த நகம்

மார்க்க கல்வி கற்றுக் கொள்வதில் தடையும் இடையூறுகளும் ஏற்படும்.

உடை (புதிதும் பரிசுத்தமானதும்)

உங்களுக்கு கௌரவமும், மென்மையும், பிரயோசனமும் அதிகம் ஏற்படுவதற்கான அறிகுறி இது.

உடை (சிவப்பு)

சண்டையும் சச்சரவுகளும் ஏற்படும். நீங்கள் பெண்ணாயிருந்தால் ஏதேனும் பயன் கிட்டும்.

உடை (பச்சை)

உங்களுக்கு சீக்கிரத்திலேயே மார்க்க பக்தி ஏற்படுமென்பதற்கான அறிகுறி இது.

உடை (வெள்ளை)

உங்கள் கௌரவமும், கண்ணியமும் பெருகும்.

உணவு விரிப்பைக் காணுதல்

நிறைந்த செல்வம் உமக்கு உண்டாவதற்கான அறிகுறி இது.






எலியைக் காணுதல்

அழகும், நற்குணமும், நல்லொழுக்கங்களும் நிறைந்த வாழ்க்கைத் துணைவி கிடைப்பாள்.

எலுமிச்சம் பழத்தைக் காணுதல்

உமது கஷ்டங்களனைத்தும் நிவர்த்தியாகிவிடும். உல்லாச வாழ்க்கை நடத்தும் வசதிகளெல்லாம் ஏற்படும்.

எழுதுகோல்

மார்க்க ஞானமோ அல்லது பக்தியோ ஏற்படும். இது இல்லாவிட்டால் ஆண் சந்ததி பிறக்கும்.

எள்ளைக் காணுதல்

நீர் வேலை செய்யும் நல்ல எசமாநிடமிருந்து நற்பயன்களைப் பெறுவீர்கள்.




ஏசுதல்

வறுமை உண்டாவதற்கான அறிகுறி.

ஏரியில் ஸ்நானம் செய்தல்

உலக சங்கடங்களிளிருந்து விலகி, பரிசுத்தமாவீர்கள். சந்ததியாருடைய அச்சம் இல்லாமல் இருப்பீர்கள்.

ஏர் உழுதல்

நீர் பிரம்மச்சாரியாயிருந்தால் விரைவில் திருமணம் நடைபெறும். மனமானவராக இருந்தால் சந்ததி ஏற்படும். அல்லது குடும்ப நலன்களை அடைவீர்.




ஐஸ் (பனிக்கட்டி) காணுதல்
கட்டியாகக் கான்பீர்கலாயின் துக்கம் ஏற்படும். நீர் அதனைப் பருகுவதாகக் கண்டால் சந்தோஷம் ஏற்படுவதற்கான அறிகுறி இது.

ஐஸ் உண்பதாக காணுதல்

உள்ளத்திற்கு மகிழ்ச்சி ஏற்படும். மனக்குறைகள் அகலும், மனக் கவலைகள் நீங்கும்.




ஒட்டகத்தைக் காணுதல்
எதிர்பாராத வகையில் அளவிலாத பொருள் கிடைக்கும்.
ஒழு செய்யக் காணுதல்

நம்பிக்கைக்குரியவனாய் சமைவதட்கான அறிகுறி இது.



ஓடும் தண்ணீர்

நீர் தற்போது நினைத்துக்கொண்டுள்ள காரியம் நல்ல விதமாக முடிவு பெறும். எதிர் பார்க்கும் பொருள் வந்து சேரும்.



கஃபதுல்லாஹ்

சமுதாயத்தில் பெருமையும், கௌரவமும் ஏற்படும். அந்தஸ்து உயரும் அல்லது சொத்தில் பாகம் கிடைக்கும் அல்லது நல்ல அறிஞனாவீர்கள்.

கஃபாவைச் சுற்றி வருதல்

பாவச் செயல்களினின்றும் விலகுவீர்கள் அல்லது ஈன்றெடுத்த தாய் தந்தையருக்கு வழிப்பட்டு நடப்பீர்கள் அல்லது குடும்பத்தார் பால் கவனம் செலுத்துவீர்கள்.
கடுமையான காற்று

உமக்கு அபாயம் ஏற்படுவதற்கான அறிகுறி இது.
கண்ணாடி

கலாஞானம் பெறுவீர்கள். சந்தோஷ வாழ்க்கை நடத்துவீர்கள்.
கண்மை (நேத்திர அஞ்சனம்)

சந்ததிகளால் சந்தோஷம் ஏற்படும். மனம் குதூகலமடையும்.
கஸ்தூரி

நல்ல பெயர் கிட்டும். புகளுக்குரியவராவீர், சிறப்பும் பெறுவீர். பெரிய அறிஞராய் விளங்குவீர்.
கபன் அணியக் காணுதல்

உமது ஆயுள் வளர்ச்சியடையும், சந்தோஷமும் உண்டாகும். அரசாங்க நன்மை கிட்டும்.
கப்ருஸ்தான்

நீர் எப்போதோ மறந்து போய்விட்ட ஒரு முக்கிய நல்ல விஷயம் மீண்டும் உமது ஞாபகத்திற்கு வரும்.
கற்கண்டு

நல்ல முதலும் மூலதானமும் கிட்டும். நல்ல வார்த்தையைக் கேட்பீர். அல்லது உமக்கு ஒரு நட்புத்திரன் பிறப்பான். அல்லது அழகிய பெண் ஒருத்தி கிடைப்பாள்.


கா

காடு

உம்மைப் பீடித்துள்ள கவலை நிவர்த்தியாகும், உம் எதிரிதோல்வியுறுவான்.
காற்றைக் காணுதல்

உம்மைப் பீடித்துள்ள துக்கமும், கவலையும் நீங்கி விடுபடுவீர்.


கி

கியாமத் (உலக முடிவு)

அரசன் அல்லது அதிகாரியின் நீதச் செயல் பிரபலமாகும்.
கிணறு

உமக்கு அரசன் அல்லது மந்திரி அல்லது அறிஞரின் நட்பு கிட்டும். நல்ல ஊழியன் கிடைப்பான். அல்லது அழகிய பெண் கிடைப்பாள்.
கிளி

உமக்கு வாழ்க்கையில் சந்தோஷமும், வெற்றியும் சமாதானமும் உண்டாகும்.

கு

குடலைப் பார்த்தல்

உமது இல்லத்தில் தளவாடங்கள் அதிகமாகும். சந்தோஷம் ஏற்படுவதற்கான அறிகுறி இது.
குங்குமப் பூவை காணுதல்

நீர் செய்துள்ள அல்லது செய்துவரும் நட்கிரியைகள் பிரபலமடையும், பெரியோர்களின் சகவாசம் ஏற்படும்.
குத்பா ஓதுவதை காணுதல்

மார்க்கத்தின் மீது பக்தியும் பற்றும் ஏற்படும்.
குர்ஆன் ஓதுதல்

எதிர் பாரவகையில் சொத்து ஏதேனும் கிடைக்கும். அல்லது பாதுகாப்புப் பொருள் வந்தடையும் அல்லது நேர்மையான பொருள் கிட்டும், தெய்வபக்தி உண்டாகும்.

குர்பானி செய்தல்

அச்சம், கவலைகளிலிருந்து விடுதலை பெறுவீர்கள். பென்னாயிருப்பின் ஆன சந்ததி உண்டாகும்.
குளித்தல்

அச்சம், கவலை முதளிவற்றிளிருந்து விடுதலை கிடைக்கும்.
குள்ளனைக் காணுதல்

மதிப்பை இழப்பீர், சோம்பேறியாய்ச் சுற்றியலைய நேரிடும்.


கூ

கூஜாவைக் காணுதல்

அழகும் அடக்கமுள்ள மனைவி கிடைப்பாள்.

கை
கைவிரல்களைக் காணுதல்

உமக்கு ஒரு கூட்டாலியோ அல்லது சகோதரனோ அல்லது நம்பிக்கைகுரிய ஒரு நபரோ அல்லது மனைவியோ துணையாகக் கிடைப்பார்.

கொ

கொசுவைக் காணுதல்

நீர் நலிந்து மேளிந்தவராகயிருப்பின் இலேசான வியாதிக்குள்ளாவீர்.

கொலை புரிதல்

நீர் சுகமடைவீர், அத்துடன் உம் வாழ்க்கையில் அமைதி ஏற்படும், வியாதிகள் நீங்கும் கடன்காரராயின் கடன் தொல்லை நீங்கும் அல்லது ஹஜ்ஜு செய்யும் பாக்கியம் கிட்டும்.


கோ
கோட்டை

மார்க்க பக்தியும் பற்றும பெருகும், பேணுதல் உண்டாகும்.
கோதுமையைக் காணுதல்

சிரமங்களினூடே பொருள் கிடைப்பதற்கான அறிகுறி இது.

கோழி முட்டையைக் காணுதல்

அழகிய நல்ல பெண் ஒருத்தி உமக்குக் கிடைப்பாள். அல்லது நண்பரால் சந்தோஷமுன்டாகும்.




ஸஹாபாக்களை (திரு நபியின் தோழர்களை) காணுதல்

உமக்கு செல்வம் உண்டாகும், சந்தோஷம் பெருகி குதூகல வாழ்க்கை நடத்துவீர்.



சந்திரன் மாடியில் அல்லது இல்லத்தில்

நல்ல குணம் உள்ள தனயன் தோன்றுவான், பெண்ணாயிருப்பின், தகுதியற்ற கணவன் கிடைப்பான்.
சந்தனம்

நல்ல பெயர் உண்டாகும். பெருந்தன்மை ஏற்படும் பக்தனாய் கருதப்படுவீர்.

சமுத்திரத்தில் நீந்துதல்

கல்வி வளர்ச்சியில் பேரார்வம் ஏற்படும். அதிலேயே நேரம் கழியும்.
சர்ப்பம் (பாம்பு)

நீர் காணும் சர்ப்பம் கறுப்பாக இருந்தால் செல்வம் கொழிக்கும். அவ்வாறில்லையாயின் துக்கமேற்படும்.
சன்மானம் கிடைத்தல்

அழகும் பண்பும் நிறைந்த மனைவி கிடைப்பாள். அல்லது நற்குணமுள்ள மகன் பிறப்பான்.

சா

சாயம்

உமது நிலை உயரும், சமூகத் தலைவனாவீர்.

சி

சிங்கத்தைக் காணுதல்

உம் பகைவரை வெல்வீர்.
சிட்டுக்குருவி

நீர் பிறருக்கு அடிமை வேலை செய்யும் பணியாலராவீர். அல்லது உம் பணியாளரிடமிருந்து நன்மை பெறுவீர்.
சிம்மாசனத்தைக் காணுதல்

ஓர் அதிகாரியாகச் சமைவீர். உமது மனதுக்கு உல்லாசம் கிடைக்கும்.

சிம்மாசனத்தில் அமர்தல்

அரசு பதவி கிடைக்கும் அல்லது அதிகாரம் வகிக்கும் பொறுப்புள்ள பதவி எது வேணும் கிட்டும். மனதுக்குச் சந்தோஷ மேற்படும்.
சிரிப்பு

இது தகாத இடத்தில் ஏற்பட்டால் கவலை ஏற்படும் என்பதற்கான அடையாளகாகும்.
சிறிய குமாரனைக் காணுதல்

நீர் ஈன்றெடுத்த குழந்தையினால் சந்தோஷம் ஏற்படும்.
சிறு நீர் கழித்தல்

உம் குமாரன் ஓர் அதிகாரியாவான். நீர் பலவீனமுற்ற கேட்டுப் போய் விடுவீர்.

சு

சுத்தத்துடன் தொழுதல்

உம் தேவைகளில் மன ஓர்மை ஏற்படும், நிம்மதியும் உண்டாகும்.
சுரையா (நட்சத்திரம்)

அந்தஸ்து உயரும், சுகமும் சந்தோஷமும் உண்டாகும். மென்தேளிவு பிறக்கும்.
சுரைக்காய் செடி

உமக்கு அதிகமான பிரயோசனமும் அதிகமான நன்மைகளும் உண்டாகும்.
சுவர்க்கத்தைக் காணுதல்

உம் மனைவி பரிசுத்தமானவனாகவும், ஊழியன் நற்குணமுள்ளவனாகவும் இருப்பார்கள். அளவற்ற சந்தோஷம் உண்டாகும்.

சூ

சூரியன்

செல்வமும், சந்தோஷச் செய்திகளும் எதிர்பாரா வகையில் வந்து சேரும்.
சூரிய கிரகணம்

பெரும்பாலும் இல்லத்திலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்படும். அல்லது உமக்குச் செல்வம் சேரும் அல்லது ஏதேனுமொரு நற்செய்தி கிடைக்கும். உம்மைப் பீடித்துள்ள வியாதி சொஸ்தமடையும்.

செ செவியைக் காணுதல்
நீர் நல்ல மார்க்க பக்தியும் உத்தம குணமுள்ள பெண்ணை மணப்பீர் அல்லது நற்செய்திகள் ஏதேனும் கேள்வியுற்றுச் சந்தோஷமடைவீர்.

சே

சேவலைக் காணுதல்
அந்நிய மனிதராலோ அல்லது உம் பணியாள் மூலமோ நன்மை அடைவீர்.



தங்கம்
உம் கவலைகள் பெருகும்.

தண்ணீர் கூஜா

பணிவுள்ள பணியாள் ஒருவன் உமக்குக் கிடைப்பான்.

தயிரைக் காணுதல்

நன்மையான உணவு கிடைக்கும், உம்மைப் பீடித்துக்கொண்டுள்ள அச்சம் வரும்.

தர்மம் செய்தல்

வியாதியிலிருந்து விடுதலைப் பெறுவீர்.

தலையனையைக் காணுதல்

அந்தஸ்து உயரும், பெருந்தன்மை ஏற்படும்.

தலைப்பாகை கட்டுதல்

அதிகாரம் பெறுவீர், அல்லது அந்தஸ்து உயரும், மதிப்பும், மரியாதையும் ஏற்படும்.

தா


தாடியை காணுதல்
உமது கௌரவமும் , மென்மையும் பெருகும்.

தாடியை வெட்டக் கண்டால்

உம் செல்வம் குறையும், வழிகேடுகள் பல உண்டாகும்.

தாடி வெண்மையாய்க் காணுதல்

அந்தஸ்தும், கௌரவமும் உண்டாகும், உம் தேவைகள் பூர்த்தியாகும், கோரிக்கைகள் நிறைவேறும்.

தாய் தந்தையைக் காணுதல்

உம்மைப் பீடித்துள்ள கவலையும், துன்பமும் விலகிப் போகும், மரணமடைந்து விட்டவருக்காக ஏதேனும் நன்மையை செய்யுங்கள்.

தாய் வயிற்றிலிருந்து ஜனனம்

நீர் பாவியாகவோ அல்லது குழப்பக்காரராகவோ, குழப்பமடைந்த மனத்தினராகவோ இருப்பதால் அதை விட்டும் தப்பிக் கொள்வீர்.

தி

திராட்சை

வியாதிக்காலாயிருந்தால் வியாதியிலிருந்து விடுதலை பெறுவீர், உமது மனம் ஆனந்தமடையும்.

திறவு கோல் (சாவி)

அரசாங்கத்தின் மூலம் உமக்குச் செல்வமும், செல்வாக்கும், கௌரவமும் கிட்டும்.

து

துணி மூடை

பக்தியும் பணிவும் மிக்க மனைவி கிடைப்பாள்.

தும்மலைக் காணுதல்

உம் கோரிக்கை வெகு துரிதமாய் நிறைவேறும்.

தூ

தூக்கு மேடை

கௌரவமிக்க அந்தஸ்தைடைவீர்.

தே

தேநீர் பருகல்

பூரண சுகம் பெறுவீர், உங்கள் மனோரதங்களும், எண்ணங்களும் நிறைவேறும்.

தேவைக் காணுதல்

நீர் காணும் தேவு அழகான தாயிருப்பின் நல்ல அந்தஸ்தும் ஞானமும் உண்டாகும். அது அவலட்சனமாயிருந்தால் துக்கம் உண்டாகும்.

தேனீ

உம்மைப் பீடித்துள்ள சங்கடங்கள் விலகும். தற்காலிகமான சந்தோஷம் உண்டாகும். எவரேனும் ஓர் ஆடவரிடமிருந்து பிரயோசனம் கிடைக்கும்.

தொ


தொழுகை நடப்பது

தொழுகையில் தக்பீர் சொல்லக் கண்டால் உம்மை மரணம் நெருங்குவதாக அர்த்தம்.

தோ


தோள்

நண்பன் ஒருவன் உமக்கு உடன்தையாயிருப்பான்.



நகத்தைக் காணுதல்

இது அழகாகவும், பெரிதாகவும் கண்டால் சுகமும், சந்தோஷமும் உண்டாகும். சிறிதாகவும், விகாரமாகவும் கண்டால், நிம்மதியின்றித் திரிய நேரிடும்.

நட்சத்திரத்தைக் காணுதல்

உம்தொழில் அல்லது உத்தியோகத்தில் உமக்கு மேம்பட்ட அதிகாரிகள் அன்புடனிருப்பார்கள்.

நபிமார்களைக் காணுதல்

நீர் இரகசியத்தைப் பாதுகாப்பவராயிருப்பீர், குற்றம் புரிவதினின்றும் தப்பி விலகியிருப்பீர்.

நபி தாவூத் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களைக் காணுதல்

உமது அதிகார பாதி கிட்டும்.

நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை காணுதல்

காரியம் சித்தியாகும், நல்ல பயன்களைப் பெறுவீர்.

நபி மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை காணுதல்

உமது வாழ்நாள் முழுவதும் உமது வாழ்நாள் முழுவதும் சுகமாகவும், சந்தோஷமாகவும் கழியும்.

நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களை காணுதல்

கோரிக்கைகள் எல்லாம் நிறைவேறும், இவ்வுலக மறு உலக வெற்றிகள் ஏற்படும்.

நரகில் செல்லுதல்

பாவங்கள் உம்மைத் தீண்ட அணுகும், அவைகளிலிருந்தும் நீர் விலகிட முயற்சிக்க வேண்டும்.

நர்கிஸ்

மனைவி கர்ப்பமாவாள், ஏற்கனவே கர்ப்பமாக இருந்தால் ஒரு நல்ல மகன் பிறப்பான்.

நவரத்தினத்தைக் காணல்

வீரத்தன்மையிலும் மார்க்கப் பற்றிலும் நல்ல பெயர் ஏற்பட்டுப் புகழடைவீர்.

நறுமணம்

கஸ்தூரி போன்ற நறுமணமாயிருப்பின், மார்க்க ஞானம் பெறுவதற்கான அடையாளமாகும்.

நா

நாணயங்களைக் காணுதல்

அறிவில்லாதவர் எவருக்கேனும் நீர் உபதேசம் செய்ய நேரிடும்.

நாயைக் காணுதல்

சாதாரணப் பகைவனிடம் நீர் இடப்படுவீர்.

நாவைக் காணுதல்

அதிகமாகப் பேசும் பலக்கமுடையவராவீர்.

நி

நிழலைக் காணுதல்

உமக்குச் செல்வம் கிட்டும், அல்லது பெரியவர்கள் மூலமாய் பல நன்மைகள் ஏற்படும்.

நீ

நீண்ட நகம்

உம்முடைய பகைவனை வேல்லுவீர், மனோ எண்ணம் நிறைவேறும், அல்லது சில இரகசியங்கள் வெளியாகும்.

நீந்துதலைக் காணுதல்

சிந்தனையால் செல்வம் கிட்டுதலுக்கான அடையாளம்.

நெ

நெய்யைக் காணுதல்

சிறப்பும், இலாபமும் உமக்கு ஒருங்கே கிடைப்பதற்கான அறிகுறி இது.

நோ

நோன்பு நோற்றல்

அபாயத்திலிருந்து தப்பிவிடுவீர், கொடிய செயலில் ஈடுபடாமல் விலகுவீர்கள், உமது விவசாயமும் நாசமடையாமல் தப்பிவிடும்.



பசுவைக் காணுதல்

தரத்துக்கு தக்க முறையில் சௌகரியமும், வசதியும் ஏற்படும்.

பஞ்சு

நிரந்தர வருவாய்க்கான வழி ஏற்படும் என்பதற்கான அறிகுறி இது.

பருந்தைப் பார்த்தால்

பாவச்செயல்களையும், அக்கிரமச் செயல்களையும் அதிகமாய்ச் செய்வீர்.

பல்லக்கு பெட்டகத்தைக் காணுதல்

இதுகாறும் உம்மிடம் பொதிந்துள்ள இரகசியம் ஏதாவது வெளியாவதற்கான அறிகுறி இது.

பவளக் கல்

உதவியும், வெற்றியும் கிடைக்கும், உமது ஆயுள் நீளமாகும்.

பள்ளிவாயலில் தொழுதல்

வியாதிக்குள்ளாக நேரிடும் ஏதேனும் ஒரு பிரயாணத்திலிடுபட வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்.

பன்றியைக் காணுதல்

சங்கடத்துக்குள் சிக்குவீர் என்பதற்கான அறிகுறி இது.

பா

பாதத்தைக் காணுதல்

உமது முன்னேற்றத்துக்கும் உமக்கு அழகு ஏற்படுவதற்கு மான அறிகுறி இது. சந்தோஷ பெருகி ஆனந்த மேற்படும்.

பாம்பைக் காணுதல்

உம் பகைவனால் உமக்கு பாதகம் ஏற்படும்.

பால் கறக்கக் காணுதல்

நல்ல தொழில் செய்வீர்கள், அல்லது ஏதேனும் ஒரு பெண்ணின் செல்வத்தைப் பெறுவீர், உமது தேகத்தில் புதிய பலம் ஏற்படும்.

பி

பிரயாணக் கூட்டம்

நீர் இக் கூட்டம் செல்வதாகக்காண்பீராயின், உமக்கு ஆபத்து நேரிடும், பிரயாணக் கூடம் வருவதாக கண்டால் உம்முடைய நோக்கம் நிறைவேறும்.

பிரேதம் (ஜனாஸா) காணுதல்

சுகமும், சந்தோஷமும் உண்டாகும். நீண்ட வயது ஏற்படும். எதிர்பாராத செல்வம் கிடைக்கும்.

பிறை (சந்திரன்) காணுதல்

உமக்கு பெருந்தன்மையும், தலைமையும் ஏற்படும்.

பீ

பீரங்கியைக் காணுதல்

எதிரி மீது உமக்கு வெற்றி கிடைக்கும்.

பு

புகையைக் காணுதல்

எதிர்பாரா வகையில் உம்முடன் பிறர சண்டை செய்ய நேரிடும்.

புதைக்குழி (கப்ர்) தோண்டுதல்

புதிதாக ஓர் இல்லத்தை நீர் கட்டுவீர். செல்வம் எதிர்பாரவிதத்தில் உம்மைவந்தடையும்.

புயல் வீசுதல்

குடும்ப விவகாரத்தில் கவலைக்குள்ளாவீர்கள்.

புலியைக் காணுதல்

உமது இல்லத்தில் உள்ள எவரேனும் ஒருவருக்கோ அல்லது பலருக்கோ சுகவீனம் ஏற்படும்.