அஸ்ஸலாமு அலைக்கும் சகோதர சகோதரிகளே!

, , No Comments
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதர சகோதரிகளே!
இலங்கையில் முஸ்லிம்கள் மீதான இன வெறியர்களால் மேற்கொள்ளப்படும் இன அழிப்பு நடவடிக்கைகள் பற்றி நீங்கள் அனைவரும் நன்கு அறிந்திருப்பீர்கள். ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு சகோதரன் என்பதற்கிணங்க, இலங்கை முஸ்லிம்களுக்காக உலகிலுள்ள அனைத்து முஸ்லிம்களும் பல்வேறு வடிவங்களில், பல்வேறு முறைகளில் உதவி செய்தல் ஒவ்வொருவோர் மீதும் கட்டாய கடமையாகும்.
எனவே, இலங்கை வாழ் எமது முஸ்லிம் உறவுகளுக்காக பின்வரும் காரியங்களை அனைவரும் அதிகம் செய்யும்படி தாழ்மையோடு கேட்டு கொள்கிறோம்.


1. உங்கள் ஒவ்வொரு நேர தொழுகைக்கு பின்னரும் இலங்கை முஸ்லிம்களின் பாதுகாப்புக்காகவும் இனவெறியர்களின் அழிவுக்காகவும் துஆ செய்யுங்கள்.
2. உங்கள் ஊர்களில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் அனைத்து தொழுகையிலும் முஸ்லிம்களின் பாதுகாப்புக்காக வேண்டி குனூத் ஓதுங்கள்.
3. உங்கள் வீடுகளிலும் பள்ளிவாசல்களிலும் இதற்காக குர்ஆன் மஜ்லிஸ்கள், ஸலவாத் மஜ்லிஸ்களை ஏற்பாடு செய்து அவற்றை ஓதி அல்லாஹ்விடம் உதவி கேளுங்கள்.
4. எவ்வாறு பத்ர் ஸஹாபாக்களுக்கு பத்ர் யுத்தத்திலே படை பலமும் ஆயுத பலமும் மிக்க காபிர்களை அழிக்க அல்லாஹ் உதவி செய்தானோ, அது போல துணை செய்யும்படி பத்ர் ஸஹாபக்களின் பொருட்டால் அல்லாஹ்விடம் கேளுங்கள்.
5. முடிந்தவர்கள் சுன்னத்தான நோன்புகளை நோற்று அல்லாஹ்விடம் உதவி கேளுங்கள்.
6. சக்தி மிக்க தஹஜ்ஜத் தொழுகை தொழுது அல்லாஹ்விடம் உதவி கேளுங்கள்.
7. இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் முடிந்தவரை ஆயத்துல் குர்ஷி, ஸலவாத், இஸ்திக்பார் போன்றவற்றை எந்நேரமும் ஓதிக்கொண்டே இருங்கள்.
அனைவரையும் பாதுகாக்க அல்லாஹ் போதுமானவன்.
******************************************

0 comments:

Post a Comment